December 6, 2025, 11:02 AM
26.8 C
Chennai

தேவையின்றி ஸீன் போடுகிறார்கள்!: சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டம்!

chandrababunaidu securitycheck1 - 2025தேவையின்றி ஸீன் போடுகிறார்கள்… என்று சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டத்துடன் கூறியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு கன்னவரம் விமான நிலையத்தில் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் கிளம்பிய சந்திரபாபு நாயுடுவை கன்னவரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

முன்னாள் முதல்வரான சந்திரபாபுவின் வாகனம் நேராக விஐபி வழியே விமானம் வரை செல்லும் வசதி உள்ளது புதிதாக இதனை மாற்றி அதிகாரிகள் சந்திரபாபுவை சாதாரண பயணிகள் செல்லும் வழியே அனுப்பியதுடன், ஒவ்வொரு இடத்திலும் எல்லோரையும் போலவே சோதனையிட்டனர்!

விமான நிலையத்தில் லவுஞ்சில் இருந்து விமானம் வரை பிரத்தியேக வாகனம் ஏற்பாடு செய்யாமல் அனைவரும் செல்லும் பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்!

இந்நிலையில், விஐபி மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள சந்திரபாபுவுக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்யாமல் பொது பேருந்தில் அனுப்பி வைத்தது குறித்து தெலுங்கு தேசம் கட்சி கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மாநிலத்திலும் சந்திரபாபுவின் வாகன வரிசைக்கு பைலட் க்ளியரன்ஸை விலக்கி விட்டார்கள்! டிராபிக்கில் சந்திரபாபுவின் வாகனம் நின்றால் பாதுகாப்பின் படி நல்லதல்ல என்று தெலுங்கு தேசம் கட்சியினர் கவலைப்படுகின்றனர்

விமான நிலையத்தில் சந்திரபாபுவை இவ்வாறு சோதனையிட்டு அவமானப்படுத்தி விட்டார்கள் என்று இச்செயலை கண்டித்துள்ளார் ஆந்திராவின் முன்னாள் உள்துறை அமைச்சர்  ‘நிம்ம காயல சின ராஜப்பா’.

2014க்கு முன் சந்திரபாபு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதுபோன்று நிகழவில்லை என்றார். பகை தீர்த்துக் கொள்ளும் விதமாக இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சந்திரபாபுவின் பாதுகாப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jogi ramesh ap - 2025ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங். கட்சியின் எம்.எல்.ஏ., ஜோகி ரமேஷ், தெலுங்கு தேசம் கட்சியினர் தேவையின்றி ஸீன் போடுகின்றனர் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

இஸட் பிளஸ் பாதுகாப்பு என்பது, விமானநிலையத்துக்குள் வராது. எனவே விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர் என்றும், தேவையில்லாமல் ஸீன் போட்டுப் பார்க்கின்றனர் டிடிபி கட்சியினர் என்றும் குற்றம் சாட்டுகிறார் ஜோகி ரமேஷ்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories