தேவையின்றி ஸீன் போடுகிறார்கள்!: சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டம்!

chandrababunaidu securitycheck1 - 2026தேவையின்றி ஸீன் போடுகிறார்கள்… என்று சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டத்துடன் கூறியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு கன்னவரம் விமான நிலையத்தில் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் கிளம்பிய சந்திரபாபு நாயுடுவை கன்னவரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

முன்னாள் முதல்வரான சந்திரபாபுவின் வாகனம் நேராக விஐபி வழியே விமானம் வரை செல்லும் வசதி உள்ளது புதிதாக இதனை மாற்றி அதிகாரிகள் சந்திரபாபுவை சாதாரண பயணிகள் செல்லும் வழியே அனுப்பியதுடன், ஒவ்வொரு இடத்திலும் எல்லோரையும் போலவே சோதனையிட்டனர்!

விமான நிலையத்தில் லவுஞ்சில் இருந்து விமானம் வரை பிரத்தியேக வாகனம் ஏற்பாடு செய்யாமல் அனைவரும் செல்லும் பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்!

இந்நிலையில், விஐபி மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள சந்திரபாபுவுக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்யாமல் பொது பேருந்தில் அனுப்பி வைத்தது குறித்து தெலுங்கு தேசம் கட்சி கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

மாநிலத்திலும் சந்திரபாபுவின் வாகன வரிசைக்கு பைலட் க்ளியரன்ஸை விலக்கி விட்டார்கள்! டிராபிக்கில் சந்திரபாபுவின் வாகனம் நின்றால் பாதுகாப்பின் படி நல்லதல்ல என்று தெலுங்கு தேசம் கட்சியினர் கவலைப்படுகின்றனர்

விமான நிலையத்தில் சந்திரபாபுவை இவ்வாறு சோதனையிட்டு அவமானப்படுத்தி விட்டார்கள் என்று இச்செயலை கண்டித்துள்ளார் ஆந்திராவின் முன்னாள் உள்துறை அமைச்சர்  ‘நிம்ம காயல சின ராஜப்பா’.

2014க்கு முன் சந்திரபாபு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதுபோன்று நிகழவில்லை என்றார். பகை தீர்த்துக் கொள்ளும் விதமாக இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சந்திரபாபுவின் பாதுகாப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jogi ramesh ap - 2026ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங். கட்சியின் எம்.எல்.ஏ., ஜோகி ரமேஷ், தெலுங்கு தேசம் கட்சியினர் தேவையின்றி ஸீன் போடுகின்றனர் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

இஸட் பிளஸ் பாதுகாப்பு என்பது, விமானநிலையத்துக்குள் வராது. எனவே விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர் என்றும், தேவையில்லாமல் ஸீன் போட்டுப் பார்க்கின்றனர் டிடிபி கட்சியினர் என்றும் குற்றம் சாட்டுகிறார் ஜோகி ரமேஷ்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories