சென்னை: தமிழக மக்களின் குறைகளைக் கேட்டு போக்குவதற்காக, மத்திய அரசின் அமைச்சர்கள் அதிகாரிகள் அடங்கிய குழு வரும் மே 2 அல்லது 3ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். சென்னை விமான நிலையம் வந்திருந்த பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக மக்களின் குறைகளைப் போக்குவதற்காக, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு வரும் மே மாதம் தமிழகம் வரவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை வகுத்துள்ளார். உற்பத்தித் துறை, ஜவுளித்துறை, மீனவர்கள் நலன் தொடர்பான துறைகளில் நலத் திட்டங்கள் பல செயல்படுத்தப் படவுள்ளது, பிரதமர் மோடி, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும் வகையில் ரூ.3,000 கோடி முதலீட்டில் மின் திட்டங்களை வகுத்துள்ளார். தமிழகம் தேவைப்படும் மின்சாரம் இல்லாமல் சிக்கித் தவித்து வருகிறது. தமிழகத்துக்கு 6,000 மெகா வாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மத்திய அரசு மாற்றும்: பியூஷ் கோயல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari