விழுப்புரம்: 8 குழந்தைகள் பலியான மருத்துவமனையை அமைச்சர் ஆய்வு

Published:

விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளும் நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன. இந்நிலையில் நேற்று காலை தொடங்கி அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழந்ததால் அங்கே பதட்டம் ஏற்பட்டது. இதை அடுத்து குழந்தைகள் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். அப்போது, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ”குழந்தைகள் இறப்பு இயற்கையான முறையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் உரிய வசதிகள் உள்ளன. எனவே வேறு எந்தக் காரணமும் இல்லை” என்றார்.

Related articles

Recent articles

spot_img