December 6, 2025, 10:32 AM
26.8 C
Chennai

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்!

jaipal reddy - 2025

மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி, தமது 77 ஆவது வயதில் காலமானார்.  உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ஜெய்பால் ரெட்டி, சனிக்கிழமை நேற்று நள்ளிரவு1.28 மணிக்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு இரு தெலுகு மாநில முதலமைச்சர்களும் இரங்கல் தெரிவித்ததுடன், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர். நாட்டிற்கு ஜெயபால் ரெட்டி ஆற்றிய சேவைகள் மறக்க இயலாதவை என்று அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஜெய்பால் ரெட்டி மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார். ஜெய்பால் ரெட்டி மனிதாபிமானம் உள்ளவர் என்று அவர் புகழ்ந்தார்.

அரசியல் வட்டாரத்தில் மூத்த தலைவராக பெயர் பெற்ற ஜெய்பால் ரெட்டி நான்கு முறை எம்எல்ஏவாகவும் ஐந்து முறை எம்பியாகவும் இருந்தவர்.  உடல்நிலை சரியில்லாமல் ஜூலை 20-ஆம் தேதி ‘கச்பௌலி’ ஏஷியன் gastroenterology மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னாள் பிரதமர்கள் ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1980 இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் ஜெய்பால் ரெட்டி.

அரசியலில் அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் ஜெய்பால் ரெட்டி.  அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1998ல் சிறந்த பார்லிமென்டேரியனாக தேர்வு பெற்றவர் ஜெய்பால் ரெட்டி.

1969 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல் முறை மகபூப் நகர் கல்வகுர்த்தி தொகுதியில் நின்று வென்றவர், பின்னர் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். எமர்ஜென்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 1977இல் ஜனதா கட்சியில் இணைந்தார். 1980இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார்.

1984இல் மெகபூப் நகர் மக்களவைத் தேர்தலில் வென்றார். அதன்பின் 1998 1999, 2004, 2009 தேர்தல்களில் மக்களவைக்குத் தேர்வானார்.

ஐ.கே.குஜரால் அமைச்சரவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் மன்மோகன் சிங் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் ஜெய்பால் ரெட்டி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories