முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்!

jaipal reddy - 2026

மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி, தமது 77 ஆவது வயதில் காலமானார்.  உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ஜெய்பால் ரெட்டி, சனிக்கிழமை நேற்று நள்ளிரவு1.28 மணிக்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு இரு தெலுகு மாநில முதலமைச்சர்களும் இரங்கல் தெரிவித்ததுடன், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர். நாட்டிற்கு ஜெயபால் ரெட்டி ஆற்றிய சேவைகள் மறக்க இயலாதவை என்று அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஜெய்பால் ரெட்டி மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார். ஜெய்பால் ரெட்டி மனிதாபிமானம் உள்ளவர் என்று அவர் புகழ்ந்தார்.

அரசியல் வட்டாரத்தில் மூத்த தலைவராக பெயர் பெற்ற ஜெய்பால் ரெட்டி நான்கு முறை எம்எல்ஏவாகவும் ஐந்து முறை எம்பியாகவும் இருந்தவர்.  உடல்நிலை சரியில்லாமல் ஜூலை 20-ஆம் தேதி ‘கச்பௌலி’ ஏஷியன் gastroenterology மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னாள் பிரதமர்கள் ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1980 இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் ஜெய்பால் ரெட்டி.

அரசியலில் அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் ஜெய்பால் ரெட்டி.  அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1998ல் சிறந்த பார்லிமென்டேரியனாக தேர்வு பெற்றவர் ஜெய்பால் ரெட்டி.

1969 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல் முறை மகபூப் நகர் கல்வகுர்த்தி தொகுதியில் நின்று வென்றவர், பின்னர் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். எமர்ஜென்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 1977இல் ஜனதா கட்சியில் இணைந்தார். 1980இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார்.

1984இல் மெகபூப் நகர் மக்களவைத் தேர்தலில் வென்றார். அதன்பின் 1998 1999, 2004, 2009 தேர்தல்களில் மக்களவைக்குத் தேர்வானார்.

ஐ.கே.குஜரால் அமைச்சரவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் மன்மோகன் சிங் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் ஜெய்பால் ரெட்டி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories