முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்!

jaipal reddy - 2026

மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி, தமது 77 ஆவது வயதில் காலமானார்.  உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ஜெய்பால் ரெட்டி, சனிக்கிழமை நேற்று நள்ளிரவு1.28 மணிக்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு இரு தெலுகு மாநில முதலமைச்சர்களும் இரங்கல் தெரிவித்ததுடன், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர். நாட்டிற்கு ஜெயபால் ரெட்டி ஆற்றிய சேவைகள் மறக்க இயலாதவை என்று அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஜெய்பால் ரெட்டி மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார். ஜெய்பால் ரெட்டி மனிதாபிமானம் உள்ளவர் என்று அவர் புகழ்ந்தார்.

அரசியல் வட்டாரத்தில் மூத்த தலைவராக பெயர் பெற்ற ஜெய்பால் ரெட்டி நான்கு முறை எம்எல்ஏவாகவும் ஐந்து முறை எம்பியாகவும் இருந்தவர்.  உடல்நிலை சரியில்லாமல் ஜூலை 20-ஆம் தேதி ‘கச்பௌலி’ ஏஷியன் gastroenterology மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முன்னாள் பிரதமர்கள் ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1980 இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் ஜெய்பால் ரெட்டி.

அரசியலில் அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் ஜெய்பால் ரெட்டி.  அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1998ல் சிறந்த பார்லிமென்டேரியனாக தேர்வு பெற்றவர் ஜெய்பால் ரெட்டி.

1969 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல் முறை மகபூப் நகர் கல்வகுர்த்தி தொகுதியில் நின்று வென்றவர், பின்னர் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். எமர்ஜென்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 1977இல் ஜனதா கட்சியில் இணைந்தார். 1980இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார்.

1984இல் மெகபூப் நகர் மக்களவைத் தேர்தலில் வென்றார். அதன்பின் 1998 1999, 2004, 2009 தேர்தல்களில் மக்களவைக்குத் தேர்வானார்.

ஐ.கே.குஜரால் அமைச்சரவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் மன்மோகன் சிங் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் ஜெய்பால் ரெட்டி.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories