அத்திவரதரை தரிசித்து… திரும்பிய நிலையில்… பிரபல பெண் எழுத்தாளர் மாரடைப்பால் மரணம்!

Published:

teluguwriter - 2026

பிரபல தெலுங்கு எழுத்தாளர் கவிஞர் பத்திரிகையாளர் டாக்டர் கே.பி.லட்சுமி நேற்று இரவு ரயிலில் காலமானார். அத்திவரதரை தரிசித்து விட்டு வரும் வழியில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகக் கூறப் படுகிறது.

மூத்த பத்திரிக்கையாளர் பிரபல எழுத்தாளர் டாக்டர் லக்ஷ்மி (70) திங்கள்கிழமை இரவு காலமானார். ஹைதராபாதிலிருந்து 50 பேர் ஒரு குழுவாக காஞ்சி அத்திவரதரை தரிசிக்கச் சென்றனர். தரிசனம் முடிந்து திரும்பி வரும் வழியில் திங்கள் இரவு அரக்கோணம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹைதராபாத் கிளம்பினர்.

திங்கள் இரவு 8 மணி அளவில் ரயில் ரேணிகுண்டாவை நெருங்கியபோது லக்ஷ்மிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே ரயிலிலிருந்து இறங்கி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார். ஆனால் பரிதாபமாக  வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதன் பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் அவர் உடலை ஹைதராபாதுக்கு எடுத்து வந்தனர்.

ஹைதராபாத் காச்சிகுடாவைச் சேர்ந்த டாக்டர் கேபி லக்ஷ்மி மூத்த பத்திரிக்கையாளர், ரேடியோ பேச்சாளர், இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் என்று பல்முகத் திறமையாளராக பெயர் பெற்றவர். ஈநாடு குழுமத்தைச் சேர்ந்த விபுல, சதுர பத்திரிகைகளில் ஆசிரியராக தன் பணியை தொடங்கினார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

மனசுன மனசு, ஜுகாமல்லி சிறுகதை தொகுப்புகளை வெளியிட் டுள்ளார். வீக்ஷணம், கமனம் என்ற கவிதைத் தொகுப்புகள் அவரை நல்ல கவிஞராக அறிமுகப்படுத்தின. 2003இல் ஆந்திர மாநில அரசு அவருக்கு சிறந்த எழுத்தாளர் விருது அளித்து கௌரவித்தது.

மிகவும் உற்சாகமானவராகவும் சிரித்த முகத்துடன் விளங்கிய டாக்டர் கேபி லட்சுமிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர் மரணத்திற்கு இலக்கிய அன்பர்கள் அரசியல் பிரமுகர்கள் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img