4வது சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான் 2

Published:

chandrayaan 4thstage - 2026சந்திரயான் 2 இன்று குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. சந்திரயான் 2 தனது 4வது சுற்றுப் பாதையை நிறைவு செய்துள்ளது. வரும் ஆக.6ம் தேதி சந்திரயான் தனது புவி மண்டலத்தின் கடைசி சுற்றை நிறைவு செய்யும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து, ஜூலை 22 அன்று சந்திரயான்-2 ஐ ஏவியது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ !

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னதாக ஏவப்படாமல் நிறுத்தப்பட்ட சந்திரயான் -2 ஜூலை 22 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2:43 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

“ஜூலை 15, 2019 அன்று கடைசிக் கட்டத்தில் கண்டறியப் பட்டு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவப்படாமல் நிறுத்தப்பட்ட சந்திரயான் -2, மீண்டும் ஜூலை 22, 2019 திங்கள் அன்று மதியம் 2:43க்கு ஏவப்பட்டு, புவியின் அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து,வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணப் பட்டுக் கொண்டிருக்கிறது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img