ஐபிஎல்: 3ஆவது இடத்துக்கும் 7 ஆவது இடத்துக்கும் சென்ற அணிகள்!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – புதன்கிழமை – 29.09.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று (29.09.2021) துபாயில் நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. பெநளூர் அணி டாஸ் வென்றது. ராஜஸ்தானை முதலில் பேட்டிங் செய்யச் சொன்னது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ், யசஸ்வீ ஜெய்ஸ்வால் இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். அணி 77 ரன் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் அவுட்டானார். பன்னிரெண்டாவது ஊவரின் முதல் பந்தில் 58 ரன்னுக்கு லூயிஸ் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 100. அதன் பிறகு பிட்சைப் பார்வையிட வந்தவர்கள் போல வந்தார்கள்; போனார்கள்.

விளைவு அணி 20 ஓவரில் 149 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெங்களூரு அணியில் முதல் ஐந்து பேட்ஸ்மென்களும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். எனவே நாம் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து ராஜஸ்தான் மட்டையாளர்களும் பந்தைத் தூக்கியடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள்.

பெங்களூரு அணிக்கு 150 ரன் கள் எடுப்பது அல்வா சாப்பிடுவது போல. ஆரம்பத்தில் பெங்களூர் அணியின் ரன் ரேட் அதிகமிருந்தது. ஆனால் நடு ஓவர்களில் கொஞ்சம் குறைந்தது. பதினாறாவது ஓவர் முடிவில் ஸ்ரீகர் பரத் (44) அவுட்டானார். அடுத்த ஓவரில் ஆறு பந்துகளையும் மேக்ஸ்வெல் ஆடினார். முதல் பந்து 6; இரண்டாவது 2 ரன்; மூன்றாவது 4; நாலாவது பந்து 2; ஐந்தாவது பந்து 4; ஆறாவது பந்து 4 என அடித்தார். மேட்ச் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 17ஆவது ஓவரில் ஒரு ரன் எடுக்கவேண்டியிருந்தது. டிவில்லியர்ஸ் நாலு அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். 

இப்போது 14 புள்ளிகளுடன் பெங்களூர் மூன்றாவது இடத்திலும், 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ஏழாவது இடத்திலும் உள்ளது.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories