ஐபிஎல்: 3ஆவது இடத்துக்கும் 7 ஆவது இடத்துக்கும் சென்ற அணிகள்!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – புதன்கிழமை – 29.09.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று (29.09.2021) துபாயில் நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. பெநளூர் அணி டாஸ் வென்றது. ராஜஸ்தானை முதலில் பேட்டிங் செய்யச் சொன்னது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ், யசஸ்வீ ஜெய்ஸ்வால் இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். அணி 77 ரன் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் அவுட்டானார். பன்னிரெண்டாவது ஊவரின் முதல் பந்தில் 58 ரன்னுக்கு லூயிஸ் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 100. அதன் பிறகு பிட்சைப் பார்வையிட வந்தவர்கள் போல வந்தார்கள்; போனார்கள்.

விளைவு அணி 20 ஓவரில் 149 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெங்களூரு அணியில் முதல் ஐந்து பேட்ஸ்மென்களும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். எனவே நாம் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து ராஜஸ்தான் மட்டையாளர்களும் பந்தைத் தூக்கியடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள்.

பெங்களூரு அணிக்கு 150 ரன் கள் எடுப்பது அல்வா சாப்பிடுவது போல. ஆரம்பத்தில் பெங்களூர் அணியின் ரன் ரேட் அதிகமிருந்தது. ஆனால் நடு ஓவர்களில் கொஞ்சம் குறைந்தது. பதினாறாவது ஓவர் முடிவில் ஸ்ரீகர் பரத் (44) அவுட்டானார். அடுத்த ஓவரில் ஆறு பந்துகளையும் மேக்ஸ்வெல் ஆடினார். முதல் பந்து 6; இரண்டாவது 2 ரன்; மூன்றாவது 4; நாலாவது பந்து 2; ஐந்தாவது பந்து 4; ஆறாவது பந்து 4 என அடித்தார். மேட்ச் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 17ஆவது ஓவரில் ஒரு ரன் எடுக்கவேண்டியிருந்தது. டிவில்லியர்ஸ் நாலு அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். 

இப்போது 14 புள்ளிகளுடன் பெங்களூர் மூன்றாவது இடத்திலும், 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ஏழாவது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories