இந்தியாவின் முதல் பௌத்த பெரும்பான்மை மாநிலப்பகுதி… இலங்கை பிரதமர் வரவேற்பு!

Published:

ladakh people - 2026

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் தற்காலிக 370வது பிரிவு திரும்பப் பெறப் பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் பிராந்தியமும் காஷ்மீர், லடாக் என இரண்டாகப் பிரிக்கப் பட்டு, யூனியன் டெரிடரி அந்தஸ்து பெறவுள்ளது.

இதில், லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் டெரிடரி பகுதியாக மாற்றப் படவுள்ளது. இங்கு புத்த மதத்தினர் அதிகம் பேர் என்பதால், இந்தியாவில் முதல் பகுதியாக லடாக் அறியப் படுகிறது. தற்போது, இந்தியாவில் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு யூனியன் டெரிடரியாக லடாக் திகழும்.

இதனை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு, வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…

லடாக் கடைசியாக இப்போது ஒரு யூனியன் பிரதேசம் ஆகப் போகிறது. சுமார் 70 சதவீதம் பௌத்த மதப் பிரிவினர் வசிக்கும் லடாக் இந்தியாவின் முதல் பௌத்த பெரும்பான்மை மாநிலப் பகுதியாக மாறவுள்ளது. லடாக்கின் தோற்றமும், இந்தியாவின் உள்சீரமைப்பும் அந்நாட்டின் உள்விவகாரங்கள். நான் லடாக்குக்கு சென்றிருக்கிறேன். பார்த்துவர வேண்டிய இடம்… என்று பதிவிட்டுள்ளார் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்க..!

இதனிடையே, லடாக் பகுதியில் இதனை ஒரு சுதந்திர தினமாக எண்ணி, அப்பகுதியினர் ஆடிப் பாடிக் கொண்டாடி வருகின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img