வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார்களா? என்டிடிவி பிரணாய் ராய், அவரது மனைவி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

Published:

prannoy radhika - 2026

செய்தி தொலைக்காட்சி நிறுவனமனா என்.டி.டி.வி இணை நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இன்று மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எந்த சட்டப் பிரிவில்அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும் பண மோசடி வழக்கில் இருவரையும் தடுத்து வைத்து, மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பை விமான நிலைய செய்தித் தொடர்பாளர் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

முன்னணி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “சிபிஐ விசாரிக்கத் தொடங்கிய ஊழல் வழக்கு” அடிப்படையில் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தப் பட்டதாகத் தெரியவருகிறது.

அவர்கள் இருவரும் அறிவிக்கப்படாத இடத்துக்கு பயணம் செய்ய இருப்பதாகக் கூறப் பட்டது. மீண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நாடு திரும்ப திட்டமிடப்பட்டதாக என்டிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பிரணாய் ராய்யை தேடுவதாகக் கூறப் பட்டது.

இதனிடையே எடிட்டர்ஸ் கில்ட் இந்த விஷயத்தில் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, என்டிடிவி ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், இது “அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுதல்” என்று கூறியது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img