கேரள வெள்ள மீட்புப்பணிகளில் சேவாபாரதி தொண்டர்கள்! எரிச்சலில் பிணராயி விஜயன் சர்ச்சைப் பேச்சு!

pinarayvijayan - 2026

கேரளத்தில் தற்போது கனமழையின் தாக்கத்தால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட மிக மோசமான சூழலை கேரளம் கண்டு வருகிறது. கேரளம் சந்தித்து வரும் பெரும் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் படையினருக்கு உதவியாகவும், பல இடங்களில் தனியாகவும் தன்னார்வத் தொண்டு அமைப்பினர் பொதுமக்களை மீட்பது, உதவிகள் புரிவது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பு அமைப்பான சேவாபாரதி முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

கேரளத்தில் பல இடங்கள் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக உயிழிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மண்சரிவால் கட்டடங்கள் மண்ணுக்குள் புதைவதும், வெள்ள நீரில் அடித்துச் செல்வதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரை கேரளாவில் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆனது. கடந்த முறை, சபரிமலையை ஒட்டியுள்ள பத்தனம்திட்டா மாவட்டம், கொச்சின் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் பெரும் சேதங்களைச் சந்தித்தன. இந்த முறை வட கேரளமான வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதங்களைச் சந்தித்துள்ளன.

kerala flood1 1 - 2026கேரள வெள்ள நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பிணராயி விஜயன், `இது வரை 1,550 நிவாரண முகாம்களில் சுமார் 2.25 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்! மீட்புப் பணிகளில்தான் அனைவரது கவனமும் இருக்க வேண்டும். இதில் அரசியல் அறவே கூடாது! இது போன்ற பேரழிவின்போது அரசியல் விருப்பங்களை வெளிக்காட்டக் கூடாது. மீட்புப் பணியின்போது தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களின் சின்னங்களை டி சர்ட்டில் ஒட்டிக்கொள்வது, கோஷங்கள் எழுப்புவது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு, சேவா பாரதி முதலிய அமைப்புகளின் கொடிகளை டி-சர்ட்டில் காணமுடிகிறது” என்று கூறியிருக்கிறார்.

குறிப்பாக, கடந்த வெள்ள சேதத்துக்குப் பின்னர் தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் சரிவைச் சந்தித்தது. அப்போதும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் சேவாபாரதி தொண்டர்கள் பெரும் அளவில் மக்களிடம் உதவிகளைச் செய்து வந்தனர். அது குறித்து அப்போதும் தனது எரிச்சலை வெளிப்படுத்தினார் முதல்வர் பிணராயி விஜயன்.

kerala flood - 2026இந்நிலையில் இந்த வருடமும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் சேவாபாரதி தன்னார்வத் தொண்டர்கள் பெருமளவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது தங்களுக்கு அரசியல் ரீதியாக மீண்டும் ஒரு இழப்பைக் கொண்டு வரும் என்று எரிச்சல் அடைந்துள்ள பிணராயி விஜயன், அதற்காகவே இத்தகைய வெறுப்புணர்வுக் கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

sevabharathi kerala - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories