January 19, 2025, 2:56 PM
28.5 C
Chennai

பல ஆண்டுகள் உழைத்தவர்க்கும் கட்சி அங்கீகாரம் தர வேண்டும்: குஷ்பு நியமனத்தில் விஜயதாரணி

vijayadharani சென்னை : கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கட்சி அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., விஜயதாரணி. குஷ்பு, கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட விஷயத்தில் அவரின் கருத்து இதுவாக இருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் மேலிடம் குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்ததில் ஆச்சரியமில்லை. கட்சிக்கு வருபவர்களை கௌரவிக்கவும், தக்க வைக்கவும் கட்சிப் பதவி வழங்குவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் குஷ்புவுக்கு பதவி வழங்கியதில் தவறு இல்லை. அதே நேரம் சினிமா பிரபலங்களால்தான் காங்கிரசின் செல்வாக்கு வளரும் என்று கருதுவதும் தவறு. காங்கிரசுக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. இருக்கும் செல்வாக்கை தட்டி எழுப்பும் திறமை இருக்க வேண்டும். காங்கிரசுக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் கட்சி அங்கீகரிக்க வேண்டும். பதவிகள் வழங்க வேண்டும். உதாரணமாக நான் உள்பட பலருக்கு கட்சிப் பதவி கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்தான். எம்.எல்.ஏ. பதவி என்பது மக்களால் தேர்வு செய்யப்படும் பதவி. ஆனால் கட்சிப் பணி செய்வதற்காக எந்தப் பதவியும் வழங்கியதில்லை. தமிழகத்தில் காங்கிரசை முன்னணிக் கட்சியாக மீண்டும் கொண்டு வர முடியும். திறமை, உழைப்பு மீது நம்பிக்கையோடு செயல்பட்டால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்…. என்றார் அவர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.