40 வருடம் கழித்து நடிகையை சந்தித்து… தயாரிப்பாளர் கொடுத்த ‘இன்ப அதிர்ச்சி’!

Published:

actresssharadha - 2026

கையில் ஒரு கவருடன் அந்த மூத்த தயாரிப்பாளர் விவி அன்டோனி நிதானமாக காத்திருந்தார். அதுவும் ஒரு சந்திப்புக்காக! சுமார் 40 ஆண்டுகள்… தனது பழைய பாக்கியை தீர்ப்பதற்காக…! கொடுத்த வாக்கைக் காப்பதற்காக…. காத்திருந்தார்.

1979இல் புஷ்யராகம் என்ற மலையாள சினிமாவை தயாரித்தார் ஆண்டனி. மது, ஜயன், சாரதா, ஸ்ரீவித்யா முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். பொருளாதார வசதியின்றி அவரால் சாரதாவுக்கு முழு ஊதியமும் கொடுக்க இயலவில்லை.

அதன் பின் மீண்டும் இரண்டு படங்களை தயாரித்தாலும் லாபம் பார்க்க இயலவில்லை. காலம் ஓடியது. 40 ஆண்டுகள் கடந்தன. ஆண்டனி தற்போது வசதியாக உள்ளார். ஆனால் சாரதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் கொடுக்கப்படாமல் மீந்துவிட்டது.

எனவே அவரது மனம் தவித்தது. எப்படியாவது சாரதாவை சந்தித்து, அவருக்கான பாக்கி பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். சாரதா எர்ணாகுளம் டௌன் ஹாலுக்கு வருகிறார் என்ற செய்தி அவர் காதில் தேனாகப் பாய்ந்தது.

onerupee - 2026

ஆதிமக்கள் என்ற சினிமாவின் 50ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சாரதா. கையில் கவரோடு வந்து தன் எதிரில் நின்ற தயாரிப்பாளரைப் பார்த்து வியந்த சாரதா விரைவில் அவரை அடையாளம் கண்டு கொண்டார். அவரிடம் அன்போடு நலம் விசாரித்தார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அப்போதுதான் அவருக்கும் தெரியவந்தது… தனக்கு பாக்கி உள்ள சம்பளத்தை கொடுக்கத்தான் அவர் அவ்வளவு நேரம் காத்திருந்து அங்கே வந்துள்ளார் என்பதை அறிந்து வியந்து போனார் சாரதா .

சினிமா உலகில் நடந்திராத, நடக்காத இனியும் நடக்காத ஓர் அரிதான சம்பவமாகவே இது பார்க்கப் பட்டது. .இந்த செய்தி அறிந்து, அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img