பஞ்சமி நில விவகாரம்! நவ.19ல் தலைமைச் செயலர் ஆஜராக எஸ்.சி.,எஸ்.டி., ஆணையம் உத்தரவு!

bjp srinivasan complaint to sc commission - 2026

முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

சென்னையில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நவம்பர் 19ஆம் தேதி தில்லியில் ஆஜராக வேண்டும் என்று தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது

அண்மையில் அசுரன் படம் பார்ப்பதற்காக சென்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனியாக அமர்ந்து படம் பார்த்துவிட்டு பொதுவாக ட்விட்டர் பதிவில் பஞ்சமி நில மீட்பு குறித்து பாராட்டு தெரிவித்தார்

stalin cinema seat - 2026

இதையடுத்து சென்னையில் முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை மு க ஸ்டாலின் மனமுவந்து திருப்பி ஒப்படைப்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார். இதன் பின்னர் சர்ச்சைகள் வெடித்தன. பாமக., நிறுவுனர் ராமதாஸுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் மதுரை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தேசிய எஸ்சி எஸ்டி ஆணைய துணைத் தலைவர் முருகனிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை ஆவணங்களுடன் வரும் 19ஆம் தேதி தில்லியில் உள்ள ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே நாளில் பேராசிரியர் ஸ்ரீனிவாசனும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

இது குறித்து மதுரையில் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டபோது, ”முரசொலி பஞ்சமி நில விவகாரம் குறித்து குற்றம் சாட்டிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக தற்போது மவுனம் காத்து வருகின்றனர்.

”இதுகுறித்து எஸ்சி எஸ்டி ஆணையத்தில் நான் அளித்த புகார் குறித்து தமிழக அரசு இதுவரை பதில் அளித்ததாக தெரியவில்லை. முரசொலி பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என தமிழக அரசு முழுமையாக விசாரணை செய்யவேண்டும்.

”சமூகநீதி சேம்பியன் என்று தன்னை காட்டிக் கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து உண்மையை நிரூபிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories