இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., யை நிர்வகிக்க, வினோத் ராய் தலைமையில் நான்கு பேர் குழுவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.
கடந்த 2013ல் ஐ.பி.எல். தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து, பி.சி.சி.ஐ.,யில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட லோதா குழு பரிந்துரை செய்தது. இதை அமல்படுத்த தவறியதால், தலைவர் அனுராக் தாகூர், செயலர் அஜய் ஷிர்கே நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதில் பி.சி.சி.ஐ., அமைப்பை நிர்வாகம் செய்ய, புதிய நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது.
வினோத் ராய், ராமசந்திர குகா, டயானா எடுல்ஜி, விக்ரம் லிமாயி ஆகிய நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவுக்கு வினோத் ராய் தலைவராக இருப்பார். இவர், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக இருந்தவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending