சென்னை:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று கோரியும், தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு மத்திய அரசு உடனே செவிசாய்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் பிப். 9 வியாழக்கிழமை கோவை மாநகரில் தெற்கு தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள செஞ்சிலுவை சங்கம் அருகில் ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக, லட்சிய திமுக., தலைவர் டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.



