புதுதில்லி:
அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் சிலர் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வந்தது.
இந்நிலையில், இடைக்கால பொதுச் செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை. சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே பொதுச் செயலாளராக நியமிக்க முடியும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன,
இது குறித்து அதிமுக விரைவில் பதில் அளிக்கும் என்று கூறப்படுகிறது.


