இன்னா தெனாவெட்டு?! நிக்காஹ் வூட்ல மணமக்களுக்கு வெங்காய பொக்கே பரிசு!?

ONION pokey - 2026

வெங்காய விலை வெள்ளி தங்கம் போல் காஸ்ட்லி என்று காட்டுவதற்காகவும், தாங்கள் பணக்காரத் தனமான பரிசை மணமக்களுக்கு கொடுக் கிறோம்; குறிப்பாக அரசின் மீது குற்றம் சாட்டும் வகையில் வெங்காயத்தையே பரிசாகக் கொடுக்கிறோம் என்று அரசியல் பரிசாகக் கொடுக்கும் வகையிலும் கடலூரில் நடந்த நிக்காஹ் ஒன்றில் மணமக்களுக்கு, நண்பர்கள் வெங்காயத்தால் செய்யப்பட்ட பொக்கேவை பரிசாக வழங்கினர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது!

தற்போது வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு உற்பத்தி குறைவு என்றும் மாநிலத்தின் அதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருவதும் காரணங்களாகச் சொல்லப் படுகிறது. மேலும், இடைத்தரகர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு சில்லறை விலைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர் என்றும் கூறப் படுகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.180 என்று உள்ளது. இதனால் புதுச்சேரியில் வெங்காயத்தைத் திருடி, ஒருவர் மாட்டிக் கொண்டு, அவருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது.

குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் வெங்காய விலை உயர்வை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ்கள் வீடியோக்கள் வெளியிடப் ப்ட்டு வருகின்றன.

இந்நிலையில் கடலூரில் ஞாயிற்றுக் கிழமை இன்று சாகுல் – சப்ரினா ஆகியோருக்கு நிக்காஹ் நடைபெற்றது. இதில், மணமக்களுக்குப் பரிசாக, அவர்களது நண்பர்கள் ஒரு பொக்கே செய்து கொண்டு வந்து கொடுத்தனர்.

அதாவது, வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில் விலையுயர்ந்த பொருளை மணமக்களுக்கு பரிசாகக் கொடுப்பதாக எண்ணி, வெங்காயத்தில் பொக்கே செய்து பரிசாகக் கொடுத்தனர். இந்தப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வெங்காயத்தை நறுக்கினால் கண்ணீர் வரும். இதில் மணமகளுக்கு அல்லது மணமகனுக்கு யாருக்கு கண்ணீர் வரப்போகிறது என்பதை சிம்பாலிக்காக சொன்னார்களோ தெரியாது! அதற்காகத்தான் வெங்காய பொக்கே கொடுத்தார்களோ என்னவோ?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories