புதுதில்லி: சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளனர். தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


