December 6, 2025, 9:11 AM
26.8 C
Chennai

முதல்வராகும் காய் நகர்த்தலில் டிடிவி.தினகரன்

எடப்பாடி பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் மனக்கசப்பு தொடங்கிவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. கடந்த திங்கட்கிழமை சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று பார்த்த அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், கூடவே ஒரு பட்டியலையும் காட்டி ஒப்புதல் வாங்கியுள்ளார். தமிழகத்தில் உயர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் பற்றிய பட்டியல் தான் அது… 
இதை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பட்டியலை படித்து பார்த்த பழனிச்சாமி அப்படியே தூக்கி ஓரமாக வைத்துவிட்டாராம். காரணம், இடமாற்ற பட்டியலில் முதல் பெயராக இருந்தது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பெயர். கடந்த டிசம்பரில் தான் கிரிஜா தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று பெயரெடுத்தவர். கிரிஜாவுக்கு பதிலாக பரிந்துரைக்கப்பட்டவர் தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகம். 
ஏற்கனவே அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் நிலவும் சூழலில் அதிகார வர்க்கத்தையும் பகைத்துக் கொள்ள முதல்வர் விரும்பவில்லை. ஆகவே தான் மன்னார்குடி கும்பல் கொடுத்த பட்டியலை ஓரங்கட்டிவிட்டதாக கோட்டையில் கிசுகிசுக்கிறார்கள்.
இது போக, தம்பிதுரை, டி.ஜெயக்குமார், செங்கோட்டையன், எடப்பாடி இம்மூவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக் கொள்கிறார்கள் என்கிறது க்ரீன்வேஸ் சாலை வட்டாரம். இந்த தகவல் எல்லாம் சிறைக்குள் இருக்கும் சித்திக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. பொறுமை காக்கும் படி பெங்களூரூவில் இருந்து தகவல் வந்துள்ளதையடுத்து அனைத்து அமைச்சர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் தினகரன் கொண்டு வந்துள்ளார். 
பொருளாதார குற்ற வழக்கால், ஏற்கனவே அமைச்சராகும் தனது கனவு கவர்னரால் சிதைக்கபட்ட கொதிப்பில் இருக்கும் தினகரன், சித்தி சென்னைக்கு மாறுதலான பிறகி, இந்த பட்டியல் விஷயத்தை பெரிதாக்கி முதல்வராகும் முயற்சியில் படு தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories