முதல்வராகும் காய் நகர்த்தலில் டிடிவி.தினகரன்

எடப்பாடி பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் மனக்கசப்பு தொடங்கிவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. கடந்த திங்கட்கிழமை சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று பார்த்த அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், கூடவே ஒரு பட்டியலையும் காட்டி ஒப்புதல் வாங்கியுள்ளார். தமிழகத்தில் உயர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் பற்றிய பட்டியல் தான் அது… 
இதை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பட்டியலை படித்து பார்த்த பழனிச்சாமி அப்படியே தூக்கி ஓரமாக வைத்துவிட்டாராம். காரணம், இடமாற்ற பட்டியலில் முதல் பெயராக இருந்தது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பெயர். கடந்த டிசம்பரில் தான் கிரிஜா தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று பெயரெடுத்தவர். கிரிஜாவுக்கு பதிலாக பரிந்துரைக்கப்பட்டவர் தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகம். 
ஏற்கனவே அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் நிலவும் சூழலில் அதிகார வர்க்கத்தையும் பகைத்துக் கொள்ள முதல்வர் விரும்பவில்லை. ஆகவே தான் மன்னார்குடி கும்பல் கொடுத்த பட்டியலை ஓரங்கட்டிவிட்டதாக கோட்டையில் கிசுகிசுக்கிறார்கள்.
இது போக, தம்பிதுரை, டி.ஜெயக்குமார், செங்கோட்டையன், எடப்பாடி இம்மூவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக் கொள்கிறார்கள் என்கிறது க்ரீன்வேஸ் சாலை வட்டாரம். இந்த தகவல் எல்லாம் சிறைக்குள் இருக்கும் சித்திக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. பொறுமை காக்கும் படி பெங்களூரூவில் இருந்து தகவல் வந்துள்ளதையடுத்து அனைத்து அமைச்சர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் தினகரன் கொண்டு வந்துள்ளார். 
பொருளாதார குற்ற வழக்கால், ஏற்கனவே அமைச்சராகும் தனது கனவு கவர்னரால் சிதைக்கபட்ட கொதிப்பில் இருக்கும் தினகரன், சித்தி சென்னைக்கு மாறுதலான பிறகி, இந்த பட்டியல் விஷயத்தை பெரிதாக்கி முதல்வராகும் முயற்சியில் படு தீவிரமாக இறங்கியுள்ளாராம்.
ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories