தினகரனுக்கு தீபக் திடீர் எதிர்ப்பு: அதிமுக.,வில் ஏற்படும் மாற்றங்கள்

Published:

சென்னை:
அதிமுக உடையாமல், ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஓபிஎஸ்க்கு திடீரென ஆதரவு கொடுத்துள்ளார். 
ஓபிஎஸ்.,க்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் திடீர் ஆதரவு கொடுத்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 
”சசிகலாவை மதிக்கிறேன். அதிமுக உடையாமல் இருக்க விரும்புகிறேன். எடப்பாடியோ, பன்னீர் செல்வமோ யாராயிருந்தாலும், முதல்வர் பதவி எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் தினகரன் அந்தப் பதவிக்கு தகுதியில்லாதவர். 
அதிமுகவிற்கு தலைமை ஏற்க ஓபிஎஸ் முன்வரவேண்டும். அடிமட்ட தொண்டர்கள் யாரும் தினகரனை ஏற்க மாட்டார்கள்.
 தினகரன் தலைமையை ஏற்கமாட்டோம் என்று தீபக் திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். 
முன்னதாக,  அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது,  அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் என்றும் இல்லை 
என்றும், அதிமுகவில் இருந்து திரும்பிச் சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள் ; ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற திமுகவின் கனவு தோல்வியடைந்தது
; என்றுமே  திமுகதான் பிரதான எதிரி என்று தெரிவித்திருந்தார். 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img