December 5, 2025, 7:06 PM
26.7 C
Chennai

பிரியங்கா தன் ஒரிஜினல் குடும்ப பெயரை வைத்துக் கொள்ள வேண்டும்! நிரஞ்சன் ஜோதி!

priyanka 1 1 - 2025

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்களே அதற்கான தொகை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சொத்து பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு எதிராகப் பதிலுக்குப் பதில் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்.

இதற்கிடையே லக்னோவில் 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று புறப்படும் முன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

sathvi - 2025

அப்போது அவர் கூறுகையில், “காவி நிறம் என்பது இந்து மதத்தையும், ஆன்மிகத்தையும் குறிக்கிறது. ஆனால், காவி உடை அணிந்து கொண்டு முதல்வர் ஆதித்யநாத் வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் துணை போகக்கூடாது. தேசத்தின் ஆன்மாவில் பழிவாங்கலுக்கும், வன்முறைக்கும் இடமில்லை. இந்து மதத்தின் நிறம் காவி வண்ணம். முதல்வர் யோகி இந்து மதத்தைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி அளித்த முதல்வர் ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், “சன்நியாசிகளின் வாழ்வில், பொதுப்பணியில் யாரேனும் தலையிட்டால் தண்டிக்கப்படுவார்கள். வாரிசு அரசியலிலும், அனுதாப அரசியலிலும் இருப்பவர்களுக்குச் சேவையைப் புரிந்து கொள்ளுதல் கடினமாகத்தான் இருக்கும்’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தில்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தபோது, பிரியங்கா காந்தியைக் கடுமையாகச் சாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

காந்தி என்ற பெயரைப் போலியாக வைத்திருப்பவர்களால் உண்மையில் காவி நிறத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது. பிரியங்கா காந்தி தனது பெயரில் உள்ள காந்தி என்ற பெயரை நீக்கிவிட்டு, பெரோஸ் பிரியங்கா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிரிமினல்களுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதைக் கண்டு பிரியங்கா காந்தியால் பொறுக்க முடியவில்லை. போராட்டக்காரர்களுக்குப் பின்னால் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது குறித்து பிரியங்கா காந்தி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

காவி நிறத்தைப் பற்றி பிரியங்கா காந்தி எளிதாகப் பேசக் கூடாது. அதுபற்றி அதிகமாக அவர் படிக்க வேண்டும். போலியாகப் பெயர் வைத்திருப்பவர்கள்தான், அனைவரின் பெயரையும் அவ்வாறு பார்க்கத் தோன்றும். அதுபோலத்தான் யோகியின் பெயரையும் பிரியங்கா பார்த்துள்ளார்.

அப்படியென்றால் அப்பாவிகள் மீது கல்லெறிந்தவர்கள், அப்பாவிகளைத் தாக்கியவர்களை போலீஸார் தண்டிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பதைப் பிரியங்கா காந்தியே கூறட்டும். பிரியங்கா காந்திதான் போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு அவர்களை சாலைக்கு வரச் சொல்வதாக நான் பார்க்கிறேன்”.

இவ்வாறு சாத்வி நிரஞ்சன் ஜோதி குற்றம் சாட்டினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories