பிரியங்கா தன் ஒரிஜினல் குடும்ப பெயரை வைத்துக் கொள்ள வேண்டும்! நிரஞ்சன் ஜோதி!

priyanka 1 1 - 2026

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்களே அதற்கான தொகை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சொத்து பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு எதிராகப் பதிலுக்குப் பதில் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்.

இதற்கிடையே லக்னோவில் 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று புறப்படும் முன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

sathvi - 2026

அப்போது அவர் கூறுகையில், “காவி நிறம் என்பது இந்து மதத்தையும், ஆன்மிகத்தையும் குறிக்கிறது. ஆனால், காவி உடை அணிந்து கொண்டு முதல்வர் ஆதித்யநாத் வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் துணை போகக்கூடாது. தேசத்தின் ஆன்மாவில் பழிவாங்கலுக்கும், வன்முறைக்கும் இடமில்லை. இந்து மதத்தின் நிறம் காவி வண்ணம். முதல்வர் யோகி இந்து மதத்தைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி அளித்த முதல்வர் ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், “சன்நியாசிகளின் வாழ்வில், பொதுப்பணியில் யாரேனும் தலையிட்டால் தண்டிக்கப்படுவார்கள். வாரிசு அரசியலிலும், அனுதாப அரசியலிலும் இருப்பவர்களுக்குச் சேவையைப் புரிந்து கொள்ளுதல் கடினமாகத்தான் இருக்கும்’ எனத் தெரிவித்தார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இந்நிலையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தில்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தபோது, பிரியங்கா காந்தியைக் கடுமையாகச் சாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

காந்தி என்ற பெயரைப் போலியாக வைத்திருப்பவர்களால் உண்மையில் காவி நிறத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது. பிரியங்கா காந்தி தனது பெயரில் உள்ள காந்தி என்ற பெயரை நீக்கிவிட்டு, பெரோஸ் பிரியங்கா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிரிமினல்களுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதைக் கண்டு பிரியங்கா காந்தியால் பொறுக்க முடியவில்லை. போராட்டக்காரர்களுக்குப் பின்னால் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது குறித்து பிரியங்கா காந்தி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

காவி நிறத்தைப் பற்றி பிரியங்கா காந்தி எளிதாகப் பேசக் கூடாது. அதுபற்றி அதிகமாக அவர் படிக்க வேண்டும். போலியாகப் பெயர் வைத்திருப்பவர்கள்தான், அனைவரின் பெயரையும் அவ்வாறு பார்க்கத் தோன்றும். அதுபோலத்தான் யோகியின் பெயரையும் பிரியங்கா பார்த்துள்ளார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அப்படியென்றால் அப்பாவிகள் மீது கல்லெறிந்தவர்கள், அப்பாவிகளைத் தாக்கியவர்களை போலீஸார் தண்டிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பதைப் பிரியங்கா காந்தியே கூறட்டும். பிரியங்கா காந்திதான் போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு அவர்களை சாலைக்கு வரச் சொல்வதாக நான் பார்க்கிறேன்”.

இவ்வாறு சாத்வி நிரஞ்சன் ஜோதி குற்றம் சாட்டினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories