தர்பாரில் போலீஸ் பற்றி அவதூறு: ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு #Darbar #Rajinikanth #ARMurugadoss

darbar rajini armurugadoss - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கடந்த ஜன.9ம் தேதி வெளியானது. வெளியான நாள் முதல் பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது தர்பார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினி காந்த் மும்பை காவல் ஆணையர் வேடத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்திய சசிகலாவின் சிறைக்காட்சி குறித்து வசனங்கள் வைக்கப் பட்டிருப்பதாகக் கூறி, ஏ.ஆர். முருகதாஸ்க்கு மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.

தொடர்ந்து லைகா நிறுவனம் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை அல்லது வசனங்களை நீக்குவதாக உறுதி கூறியது.

இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையாக, தர்பார் படத்தில் நடித்த ரஜினி காவல் துறையை இழிவுபடுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படை வீரரான மரிய மைக்கேல் என்பவர், தூத்துக்குடி 3வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தர்பார் படத்தில் சீருடைப் பணியாளர்களை புண்படுத்தும் விதமாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரஜினி காந்த், ஹிப்பி தலை, தாடி ஆகியவற்றுடன் நடித்துள்ளார். நான் கமிஷனர் அல்ல ரவுடி என்று வசனம் பேசுகிறார். இது போலீஸ், ராணுவத்தினரை கொச்சைப் படுத்துவது போல் உள்ளது. எனவே இந்த கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த், முருகதாஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ள நீதிமன்றம் வரும் 21ம் தேதி இது குறித்து விசாரிக்கப் படும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories