நெல்லை: அம்மாவை அடித்துக் கொன்று விட்டு அருகிலே 2 நாள் அமர்ந்திருந்த மகன்!

amma son - 2026

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வானமாமலை. ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அவர் வேலையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்.

கருணை அடிப்படையில் அந்த வேலை அவரது இளைய மகன் அகிலன் என்பவருக்கு கிடைத்தது. இப்போது அகிலன் வயசு 50 ஆகிறது. விருதுநகரில் ரெயில்வே ஊழியராக வேலை செய்து வந்தார். ஆனால் அகிலனுக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

4 முறை கல்யாணம் ஆயிடுச்சாம். நாலுமே விவாகரத்தும் ஆயிடுச்சாம். அடிக்கடி மனரீதியாக அகிலன் பாதிக்கப்பட்டதால், அவரை வேலையில் இருந்தும் நீக்கிவிட்டனர்.

அதனால் அகிலன் தன்னுடைய அம்மா விமலாவுடன் விருதுநகரிலேயே வசித்து வந்தார். பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் விமலாவுக்கு சொந்தமாக அடுத்தடுத்து 4 வீடுகள் இருக்கின்றன.

எல்லா வீட்டையும் விமலா வாடகைக்கு விட்டிருக்கிறார்.. வாடகை வசூல் செய்ய மட்டும் தாயும் – மகனும் அடிக்கடி பாளையங்கோட்டை வருவார்கள்.

அப்படி வரும்போது, இங்குள்ள ஒரு வீட்டில் தங்குவார்கள். வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடகை வாங்க அகிலனும், விமலாவும் வந்தனர். ஆனால் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து நாற்றம் அடித்தது.

ரத்த வெள்ளம்அக்கம் பக்கத்தினரால் இருக்கவே முடியல.. அதனால் அகிலன் வீட்டை எட்டி பார்த்தனர். விமலா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

பக்கத்திலேயே ஒரு இரும்பு கம்பி கிடந்தது… அம்மாவின் சடலம் பக்கத்தில் அகிலன் உட்கார்ந்திருந்தார். இந்த காட்சியை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தந்தனர்.

விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றியதுடன் அகிலனை பிடித்து விசாரணை நடத்தினர். அகிலன் சொன்ன பல திடுக் தகவல்களை கேட்டு காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர்.

வாடகை வசூல் செய்துவிட்டு வீட்டில் இருந்தபோது, அகிலனுக்கு திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது அம்மாவுடன் சண்டை போட்டுள்ளார். ஆத்திரத்தில் தான் அகிலன், விமலாவை இரும்பு கம்பியால் அடித்ததாக கூறப்படுகிறது. விமலா இறந்து 2 நாள் ஆகியும், சடலம் பக்கத்திலேயே அகிலன் உட்காரந்திருக்கிறார்.

பூட்டிய கதவில் இருந்து நாற்றம் வெளியே வந்து அக்கம் பக்கத்தினர் வரும்வரை அகிலன் நகரவே இல்லை. அம்மாவை இரும்பு கம்பியால் அடித்து கொல்லும்போது, அகிலன் கையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தபடியே இருந்திருக்கிறது.

இப்போது கைது செய்யப்பட்ட அகிலனை காவல்துறை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை தந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories