அர்ஜுன் சம்பத்தின் ‘அந்த ஒரு வார்த்தை’! அவ்ளோதான்… போலீஸ் படையே இப்போது சாந்தோம் சர்ச்சில்..!

Santhome Basilica Chennai - 2026

சென்னை சாந்தோம் சர்ச்சுக்குச் சென்று, இது இந்துக் கோயில் இருந்த இடம் என்று கூறி தகவல் கேட்டுள்ளார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். இதைக் கேட்டு ஆடிப் போன சர்ச் ஊழியர்கள், போலீஸுக்கு ஜஸ்ட் போனிலேயே தகவல் கொடுத்த நிலையில், உடனடியாக போலீசார் ஓடோடி வந்து பாதுகாப்புப் பணிக்கு ரவுண்டு கட்டியதால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மயிலாப்பூர் சாந்தோம் சர்ச்சுக்கு நேற்று காலை சென்றார். அப்போது அவர், சர்ச் ஊழியர்களிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது, ”இங்குள்ள அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும்! அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்கள் எல்லாம் கோவிலில் இருந்த பொருட்கள் என சொல்கிறார்கள்! அவற்றை நான் பார்க்க வேண்டும்! உங்கள் பாதிரியாரை கூப்பிடுங்கள்; நான் அவரிடம் பேச வேண்டும்” என்று கூறியுள்ளார்! மேலும், ”சர்ச்சு கட்டுவதற்கு முன்பு இங்கு கபாலீஸ்வரர் கோவில் இருந்தது! அந்த இடத்தில் தான் தற்போது சர்ச்சை உள்ளது!” என்று சொன்னதாக கூறப்படுகிறது!

ஆனால் அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்ததால், அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் திடீரென சாந்தோம் சர்ச்சுக்கு வந்ததும், அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும் என்று சொன்னதும், இது முன்னர் கோவில் இருந்த இடம் என்றும் கூறியதால், சர்ச்சுக்கு வந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு சர்ச் ஊழியர்கள் வாய்மொழியாக புகார் அளித்தனர். வாய்மொழியாக சொன்ன அடுத்த நிமிடத்திலேயே இரண்டு உதவி ஆய்வாளர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீஸார் படை திரண்டு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்!

1 COMMENT

  1. 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது மேற்படி சாந்தோம் சர்ச் என்றால் …சர்ச் கட்டப்படுவதற்கு முன் அவ்விடத்தில் என்ன இருந்தது ? என்பதற்கான வலுவான ஆதாரம் இல்லாமல் நிச்சயம் அர்ஜுன் சம்பத் அங்கு வந்திருக்க மாட்டார். இது சம்பந்தமான கல்வெட்டு தற்போதய மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் இருப்பதாக கூறுகிறார்களே ….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories