திருச்சி, நெல்லை கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

Published:

images 30 - 2026

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட
கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விவரம்:

மீன்வளத் துறை இயக்குநராக தண்டபாணி நியமனம்.

நகர மற்றும் ஊரக திட்டத்துறை ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக ராஜா மணி ஐஏஎஸ் நியமனம்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பழனிசாமி ஐஏஎஸ் நியமனம்

நாகை ஆட்சியராக சுரேஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமனம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக வெங்கடேஷ்நியமனம்.

போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளராக டேவிதார் நியமனம்.

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் நாயர், தமிழ்நாடு
மகளிர் மேம்பாட்டுக்குழு மேலாண் இயக்குனராக மாற்றம்.

அரியலூர் ஆட்சியர் திரு.சரவணவேல்ராஜ் பள்ளி கல்வி இணை இயக்குநராக பணிமாற்றம்
மாற்றம்.

நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கருணாகரன் வேளாண்துறை கூடுதல் செயலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக நந்தகுமார் நியமனம்குடிநீர் வாரிய
மேலாண்மை இயக்குனராக மகேஸ்வரன் நியமனம்

கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் நில நிர்வாக ஆணையராக மோகன் பியாரே
நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலராக வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி
நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் பதிவாளராக ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை கூடுதல் செயலராக ஆர்.அனந்தகுமாரை தமிழக அரசு நியமித்துள்ளது.

நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குனராக எம்.ரவிக்குமாரை அரசு
நியமித்துள்ளது.

சர்வ சிஷ்ய அபியான் திட்ட இயக்குனராக கே.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிலத்துறை கூடுதல் செயலராக பூஜா குல்கர்னியை தமிழக அரசு நியமித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img