December 6, 2025, 7:53 PM
26.8 C
Chennai

சென்னை ஐஐடி.,யில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியவர்களுக்கு ‘தர்ம அடி’!

IIT Madras PhD scholar who participated in beef fest beaten - 2025

சென்னை:
சென்னை ஐஐடி., வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து நடத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு சக மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கால்நடை வணிக விதிமுறையில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக இடதுசாரிகள் அதிகமுள்ள கேரளாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன், காங்கிரஸார் சிலரும் கைகோர்த்தனர். அவர்கள் மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கேரளத்தில் நிகழ்ந்ததைப் பார்த்து, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் தூண்டுதலில், ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தினர். இதில், 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கி வந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து உண்டனராம். இதை மாட்டிறைச்சித் திருவிழா என்ற பெயரில் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த கேரளத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சூரஜ்க்கு சக மாணவர்கள் தர்ம அடி கொடுத்தனர். ஹால்டல் கேண்டீனில் மதிய உணவு வேளையின் போது சுமார் 7 மாணவர்கள் சேர்ந்து சூரஜ் மீது தாக்குதல் நடத்தினராம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வலதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் சூரஜின் வலது கண் கடுமையாக காயம் அடைந்துள்ளது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் குறித்து டீன்-இடம் மாட்டிறைச்சித் திருவிழா நிகழ்ச்சி நடத்திய மாணவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மாட்டிறைச்சி உண்ணுவது உரிமை எனப் போராடுபவர்களுக்கு இருந்தால், மாட்டை புனிதமாகக் கருதி அவற்றைப் பாதுகாப்பவர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் கோஷம் இட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories