22-03-2023 5:51 PM
More
    Homeஉள்ளூர் செய்திகள்மாடு விற்பனை மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை!

    To Read in other Indian Languages…

    மாடு விற்பனை மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை!

    madurai high court - Dhinasari Tamil

    மதுரை:
    உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் வரன்முறையற்ற வகையில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    மத்திய அரசு, விவசாயப் பணிகள் அல்லாத, இறைச்சி நோக்கத்தில் மாடுகளை, கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதை வரன்முறைப் படுத்தும் புதிய உத்தரவை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
    அதில் அவர் கூறியிருந்ததாவது:-
    கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்தது. மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × 4 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,627FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...