கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வியாபாரிகளும் , பொதுமக்களும் அதிகமாக கூடும் பகுதியான கோயம்பேட்டில் ஏற்கனவே கிருமி நாசினி தெளிப்பு போன்ற பல்வேறு வகையான நடவடிக்கைகள் அரசு எடுத்து வந்தது.
அவ்வாறு இருந்தும் அப்பகுதியில் 2 பேருக்கு கொரோனா பரவியது. இது மேலும் அதிகரிக்கப்படும் என்பதால் , சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்றும் , இன்றும் ஆலோசனை நடத்தினார்கள் , இந்த ஆலோசனையில் அரசு அதிகாரிகள் , வியாபாரிகள் கலந்து கொண்டு , முதற்கட்டமாக 1500 கடைகளை மூடப்படுவதாக வியாபாரிகள் அறிவித்தனர். அரசிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை கடைகள் மூடி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.