December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

மதுரை… உணவகத்தில் செப்பு பாத்திரத்தில் தண்ணீர் தருமம்!

free water in broze pot
free water in broze pot

மதுரை: மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குவதில் ஒன்று தண்ணீர். அதிலும் உணவகங்களில் பலவற்றிலும் இன்றும் கூட, பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் சில்வர் பானைகளில்தான் குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், சில உணவகங்களில், வெளியே இருந்தும் வரும் மக்களுக்கு அலுமினிய, பித்தளை பாத்திரங்களில் குடிநீர் வைக்கப்படுவதை இன்றும் காணமுடிகிறது.

இன்னும், மதுரை நகரில் சிறிய உணவகங்களில் சிறிய சிறிய பிளாஸ்டிக் கேன்களில் குடிக்க தண்ணீர் வைத்துள்ளனர். எனினும், இவற்றை எல்லாம் தவிர்த்து மக்கள் நலனில் அக்கறையுள்ள சில உணவகங்களும், தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

மதுரை காந்தி மியூசியம், பூங்கா முருகன் கோயில் அருகே உள்ள ஒரு உணவகத்தில், மக்களுக்கு நல்ல பாத்திரத்தில் தண்ணீர் வழங்கவேண்டும் என்ற நோக்குடன், செப்புக் குடத்தில் மக்கள் குடிப்பதற்காக தினசரி தண்ணீர் வைக்கப்படுகிறது.

உணவகத்துக்கு வருவோர் தவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயில் மற்றும் காந்தி மியூசியத்துக்கு வருவோரும் இந்த செப்பு…. தாமிரக் குடத்தில் ஊற்றி வைக்கப் படும் தண்ணீரைக் குடிப்பதுடன், பாட்டில்களிலும், இந்த தாமிரக் குடம் தண்ணீரை பிடித்து செல்வதைக் காணமுடிகிறது.

இதே போல் மதுரை மட்டுமில்லாமல், பெரிய நகரங்களில் உள்ள உணவகங்களிலும், தாமிரக் குடத்தில் நல்ல தண்ணீரை வைத்து மக்களுக்கு குடிக்க ஏற்பாடு செய்தால், உடல் நலம் பாதுகாப்படுவது நிச்சயம்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories