April 21, 2025, 8:14 AM
29.5 C
Chennai

‘கோயிலை இடிப்போம்… எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவந்தா கைது செய்வோம்’: தென்காசி காவல்துறை!

tenkasi hindumunnani protest
tenkasi hindumunnani protest

விசாரணை ஏதுமின்றி, கோயிலை இடிக்க முன் நிற்போம், யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால் வழக்கு போடுவோம் என்று மிரட்டுவோம், ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தால், கைது செய்வோம் என்று தென்காசி மாவட்ட காவல் துறையினர் செயல்படுவதாக இந்து முன்னணி அமைப்பினர் கூறுகின்றனர்.

இன்று, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் கடையம் அருகே உள்ள சம்பன்குளம் மற்றும் அழகப்பபுரம் பகுதிகளில் இரண்டு கோவில்களை இடிக்க உத்தரவிட்ட தென்காசி ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் அந்த இரண்டு கோவில்களையும் அரசு செலவில் கட்டித்தர வலியுறுத்தியும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

tenkasi hindumunnani protest
tenkasi hindumunnani protest

இந்நிலையில், இன்று காலை அந்தப் பகுதிக்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்காகச் செல்லும் இந்து முன்னணி அமைப்பினரை திசை திருப்பி, ஒன்று கூடாமல் செய்வதற்காக, இந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப் பட்டு விட்டதாகவும், வேண்டுமானால் தலைமைக்கு போன் பண்ணி கேட்டுக்குங்க என்றும் உளவுப் பிரிவு போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகளை குழப்பி விட்டதாகவும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

இதனிடையே, இன்று காலை இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும் முன், இந்து முன்னணி அமைப்பினர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அதன்படி, செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

hindu munnani sengottai murugan arrested
hindu munnani sengottai murugan arrested

இது போல், ஆங்காங்கே இந்து முன்னணியினரை கைது செய்து தென்காசி ஆட்சியரகம் நோக்கிச் செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். தென்காசி நகரில் போலீஸார் பெருமளவில் குவிக்கப் பட்டு, பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டு வருகிறது. இதனால் தென்காசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த இந்து முன்னணி தொண்டர்களை பகுதி பகுதியாக தென்காசி இலஞ்சி முனை பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தியும் தென்காசி ஆட்சியர் அலுவலகம் நோக்கி வரும் மற்ற பாதைகளிலும் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர் போலீஸார்.

tenkasi hindumunnani protest
tenkasi hindumunnani protest

இருப்பினும், தென்காசியில் தடைகளை மீறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்திய மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்டத்தலைவர் ஆறுமுகச்சாமி, வக்கீல் அணி மாவட்ட தலைவர் சாக்ரட்டீஸ் உட்பட 53 பேர் கைது செய்யப் பட்டனர்.

ALSO READ:  IPL 2025: பெங்களூர், மும்பை அணிகளின் கம்பேக் வெற்றிகள்!

இதனிடையே, நீல நிற டீசர்ட் அணிந்து குடி போதையில் வந்த குற்றப்பிரிவு காவலர் ஒருவர், இந்துமுன்னணி தொண்டர்களிடம் அசிங்கமாக பேசி தரக்குறைவாக நடந்ததால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், இந்த முற்றுகைப் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க செய்தியாளர்களைச் சந்திக்க விடாமல் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து காவல்துறை அராஜகம் செய்ததாகவும் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் தெரிவித்தார்.

இந்து முன்னணியினர் 53 பேர் கைது செய்யப்பட்டு தென்காசி சிவா கல்யாண மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பங்கேற்க வந்த இந்து முன்னணி தொண்டர்கள் வரும்வழியில் செங்கோட்டை, கடையம் , கடையநல்லூர் ,சேர்ந்தமரம் என மாவட்டம் முழுக்க. பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories