திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக. கேரள எல்லையில் உள்ளது செங்கோட்டை நகராட்சி
பேரூந்து நிலையம். இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து
செல்கின்றன.
குறிப்பாக சென்னை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் அண்டை மாநிலங்களான
கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள்
வந்து செல்கின்றது.
மேலும் இந்த பேருந்து நிலையத்தில் உள்ள சாலைகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக
சீரமைக்கப்படாததால் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாகக்
காட்சியளிக்கிறது.
பயணிகளை பேருந்துகளில் ஏற்றி விடவும், அழைத்துச் செல்லவும் இருசக்கர
வாகனங்களில் பேருந்து நிலையத்துக்குள் வருவோர் இந்த குண்டும்-குழியுமான
சாலைகளால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
ஆகவே, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சாலைகள் முழுமையாகச் சீரமைக்க
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.



