கொரோனா பாதிப்பு இன்று… தமிழகம்- 5,864; மரணம்- 97..!

Published:

corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 5,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் சென்னையில் மட்டும் 1175 பேருக்கு சீன வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. சீன வைரஸ் கோவிட் 19 தாக்குதலால்,  இன்று 97 பேர் மரணமடைந்துள்ளனர். அதேநேரம் 5,295 பேர் குணம் பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 59,437 பேருக்கு செய்யப்பட்டுள்ளது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில், புதிதாக 5,864 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில், 53 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள். 

இதுவரை கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை எட்டி உள்ளது.

இன்று வைரஸ் தொற்றில் இருந்து, ஒரே நாளில் 5,295 பேர் குணமடைந்துள்ளனர். அரியலூரைச் சேர்ந்த 5 வயதுப் பெண் குழந்தை, நாகையைச் சேர்ந்த 3 வயது மற்றொரு பெண் குழந்தை உள்பட, இதுவரை இல்லாத வகையில் 97 பேர்கொரோனாவுக்கு  உயிரிழந்துள்ளனர்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:

corona district wise report july 30 - 2026

Related articles

Recent articles

spot_img