திருப்பதி பெருமாளை தரிசிக்க… ரஷ்யப் பெண்ணுக்கு உதவிய சோனுசூட்!

Published:

tirupati darshan russian lady - 2026

திருமலை பெருமாள் தரிசனம் செய்து கொண்ட ரஷ்யப் பெண். சோனுசூட் உதவி.

எஸ்தர் படும் கஷ்டங்களைப் பற்றி தெரிய வந்ததால் திரைப்பட நடிகர் சோனுசூட் கூட உதவிக்கு முன்வந்தார். எப்படிப்பட்ட உதவி ஆனாலும் தான் செய்வதற்கு தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

துணை ஜனாதிபதியின் மகள், சுவர்ணபாரதி டிரஸ்ட் சேர்மன் தீபா வெங்கட் உதவிக்கு முன்வந்து உடனே அவருக்கு ஆதரவாக நின்றுள்ளார். ரஷ்யன் தாயுடனும் மகளுடனும் அவர் உரையாடினார்.

ஆன்மீக யாத்திரை வந்த ரஷ்ய யுவதி எஸ்தர் திருப்பதியில் சிக்கிக்கொண்ட விஷயம் தெரிந்ததே. மீடியாவில் வந்த விவரங்களால் அவருக்கு உதவி செய்வதற்கு பலர் முன் வந்துள்ளார்கள்.

russian lady - 2026

எது எப்படியாயினும் ரஷ்யா யுவதி இறுதியில் திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசித்துக் கொண்டார். எஸ்தர் பற்றி தெரிய வந்ததால் டிடிடி சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி பிரதிநிதிகளை ரஷியன் யுவதியிடம் அனுப்பினார். ஸ்ரீவாரி தரிசனம் கொள்வதற்கு அவகாசம் ஏற்படுத்தினார். அவர் வியாழக்கிழமை ஸ்ரீவாரி சேவையில் பங்கு கொண்டார். தன் விருப்பம் நிறைவேறியது. ஸ்ரீவாரி தரிசனம் கிடைத்ததில் ஆனந்தமாக உள்ளது என்றார். தன் கஷ்டங்கள் பற்றி அறிந்து உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

எஸ்தரின் கஷ்டங்கள் தெரியவந்ததால் திரைப்பட நடிகர் சோனுசூட் கூட உதவ முன்வந்தார். எப்படிப்பட்ட உதவி செய்வதற்கும் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

ஆன்மீக யாத்திரைக்கு இந்தியா வந்து இங்கே சிக்கிக்கொண்டு யுவதி படும் கஷ்டங்களை அறிந்த ஒரு வழக்கறிஞர் குடும்பம் எஸ்தரை ஆதரித்து அவருக்கு தம் வீட்டிலேயே தங்கும் வசதியும் உணவு வசதியும் அளித்துள்ளார்கள்.

russian lady 1 - 2026

அதேபோல் எம்எல்ஏ பூமன கருணாகர ரெட்டி கூட அவருக்கு பண உதவி செய்தார். அதுமட்டுமின்றி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகள் சுவர்ணபாரதி டிரஸ்ட் சேர்மன் தீபா வெங்கட் உடனே அவருக்கு உதவிக்கு வந்து துணையாக நின்று உள்ளார். தாயோடும் மகளோடும் அவர் உரையாடினார்.

ரஷ்யன் -தெலுங்கு, ரஷ்யன் -இந்தி பேசக் கூடிய துபாஷிகளை அவர்களிடம் அனுப்பிவைத்தார். பிருந்தாவனத்தில் சிக்கிக்கொண்ட ஒலிவியாவை திருப்பதிக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img