December 5, 2025, 11:21 PM
26.6 C
Chennai

காதலை மறுத்து வேறு இடத்தில் திருமணம்! கல்லூரி மாணவி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

sneka

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட துரைசாமிபுரம் என்ற பகுதிக்கு அருகேயுள்ள புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசனின் மகளின் பெயர் சினேகா. இவருக்கு அடுத்த வியாழக்கிழமை அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

19 வயதான சினேகா. மதுரை திருப்பாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் சினேகா வீட்டில் இருந்து வந்தார். சினேகாவுக்கும், மெய்யனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வரும் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை கிராமத்தின் அருகில் உள்ள மலையடிவாரத்தில் இவர்களுக்குச் சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்திற்கு சினேகா சென்றிருந்தார். அப்போது தோட்டத்திலுள்ள ஒரு மரத்தில் சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சினேகா மரத்தில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்த அங்கிருந்தோர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்

தகவல் அறிந்து சென்ற போலீசார் சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தற்கொலை செய்துகொண்ட இடத்தின் அருகில் ஆய்வு செய்தபோது சினேகா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

அதை வைத்து விசாரித்தபோது, கல்லூரிக்கு சென்று வரும் போது மதுரை புதூரில் உள்ள உறவினர் ஒருவரின் மகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையில் காதலாக மலர்ந்துள்ளது; காதல் விவகாரம் சினேகா வீட்டுக்கு தெரிந்து விசாரித்துள்ளனர். ஏற்கெனவே இரு குடும்பத்திற்கும் இடையில் நீண்டநாள் பகை உள்ளதால், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சினேகா தனது காதலில் உறுதியாக இருந்ததால், அவசர அவசரமாக வேறு ஒருவருடன் பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.

ஆனால் நிச்சயத்தை ஏற்காத சினேகா காதலனுடன் சேர்த்து வைக்குமாறு பெற்றோரிடம் போராடி வந்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் சினேகாவின் பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு சினேகா தனது காதலனுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். அதன் பிறகு நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டில் இருந்து புறப்பட்டு மலை அடி வாரத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு மரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

சினேகாவின் தற்கொலை கடிதத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றி பெற்றோர், உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories