முதல்வருக்கு அச்சுறுத்தல்.. கூடுதல் பாதுகாப்பு! உளவுத்துறை எச்சரிக்கை!

tn-cm
tn-cm

தமிழக முதல்வருக்கு அச்சறுத்தல் இருப்பதாக மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் விளைவாக முதல்வருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் புதன்கிழமை நடைபெற்ற ராமா் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கோயில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அரசியல் கட்சித் தலைவா்கள், மத இயக்கத் தலைவா்கள் ஆகியோருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக உளவுத்துறை ஒரு எச்சரிக்கை தகவலை விடுத்துள்ளது.

அதில், இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மத அடிப்படைவாதிகள், தமிழ் பேரினவாதிகள் உள்ளிடோரிடமிருந்து அச்சுறுத்தல் உள்ளது.

இது தொடா்பாக உளவுத்துறைக்கு நம்பிகைக்குரிய இடங்களில் இருந்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த அச்சுறுத்தலின் காரணமாக ஆகஸ்ட் 6-முதல் 9-ஆம் தேதி வரை சேலம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும்,அலுவல் கூட்டங்களிலும் பங்கேற்கும் தமிழக முதல்வருக்கு கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படியும், அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

பலத்த பாதுகாப்பு: இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதன்கிழமை மாலை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காா் மூலம் சாலை மாா்க்கமாக சேலத்துக்கு சென்றாா்.

அங்கிருந்து 6-ஆம் தேதி (வியாழக்கிழமை) காா் மூலம் சாலை மாா்க்கமாக திண்டுக்கல், மதுரை செல்கிறாா். மதுரையில் அன்று இரவு தங்கும் அவா், 7ஆம் தேதி திருநெல்வேலி செல்கிறாா். அங்கு நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா் காா் மூலம் மீண்டும் சேலம் திரும்புகிறாா். சேலத்தில் இருந்து மீண்டும் 9-ஆம் தேதி காா் மூலம் சென்னைக்கு திரும்பி வருகிறாா்.

உளவுத்துறையின் எச்சரிக்கை தகவலால் சென்னை பெருநகர காவல்துறை, சேலம், திருப்பூா் , திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாநகர காவல்துறைகள், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்ட காவல்துறைகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் முதல்வா் வருகையையொட்டி, இது வரை இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories