சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் திமுக., கோரிக்கையை பாஜக., ஏற்காது!

udhayanidhi stalin
udhayanidhi stalin

மாநிலங்களில் உடனே நடைமுறைப்படுத்தாமல் புதிய தேசிய கல்வி கொள்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

புதிய தேசிய கல்வி கொள்கையில் 6வது பிரிவில், அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதால், இதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

அல்லது, சமூக, பொருளாதார, பாலின மற்றும் உடல் குறைபாடுகளின் அடிப்படையில் சமூகத்தில் உள்ள பாகுபாடுகளால் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் கல்வியை குழந்தைகளுக்கு தங்கு தடையில்லாமல் சென்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்துவதால், நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

அல்லது பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வியில் இடைநிற்றல் அதிகளவில் இருப்பது பட்டியிலன, பழங்குடி, இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் தான் என்பதை புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டு, மேற்கண்ட பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை ‘சிறப்பு கல்வி மண்டலங்களாக’ அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்த தங்கு தடையில்லா கல்வியை பெறுவதற்கான பல சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அளிப்பததோடு, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என பாஜக அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துவதால், இதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

அல்லது, தற்போதைய கல்வி முறையில் அதிகளவில் கல்வி மறுக்கப்படுவதும், இடைநிற்றல் அதிகமாய் இருப்பதும் பெண் குழந்தைகளுக்கே என்பதை கண்டறிந்து, நாட்டின் வளர்ச்சி, சமூக, கலாச்சார முன்னேற்றத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையில் பெண்களின் பங்கை உணர்ந்து, புதிய தேசிய கல்வி கொள்கையானது, பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்துவதற்காக, பாதுகாப்பு மிக்க நவீன உறைவிட பள்ளிகளை உருவாக்குவதோடு, பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கழிப்பறை வசதிகள், மற்றும் இதர தேவையான வசதிகளை உறுதி செய்ய மத்திய அரசு நிதி தொகுப்பை உருவாக்கி அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவதன் மூலம் பெண் குழந்தைகள் அதிக அளவில் கல்வியில் மேம்பட்டு விடுவார்கள் என்பதால், இதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று விரும்புகிறாரா?

அல்லது, சமூகநீதி காக்க அனைத்து குழந்தைகளையும் உள்ளடக்கிய, சமமான கல்வி பெறுவதற்கு பள்ளிகளில் நிலவும் தற்போதைய கலாச்சாரத்தை மாற்றியமைப்பது இன்றியமையாதது என்று தேசிய கல்வி கொள்கை குறிப்பிட்டிருப்பதோடு, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமிக்க வகையில் அனைத்து பிரிவினரையும் கண்ணியத்தோடு கூடிய மரியாதையை பேணிகாக்கும் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் அமைப்பை உருவாக்குவது அவசியம் என்றும், சமூக ரீதியாக பின்தங்கிய சமுதாயத்திலிருந்து தரமிக்க கல்வி பயின்ற ஆசிரியர்களை, தலைவர்களை உருவாக்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலன, சிறுபாண்மை மக்களின் மேம்பாட்டை உறுதி செய்யும் இந்த புதிய கல்வி கொள்கை என்பதால் நிறுத்தி வைக்க வேண்டும் என்கிறாரா?

அல்லது பண்டைய இந்திய நாகரீகத்தின் தத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமையுள்ள இந்தியாவின் கலாச்சாரத்தையும் குழந்தைகள் கற்க வேண்டும் என்பதால் அனைத்து மதங்கள் குறித்தும், அவை அனைத்துமே பொதுவான கலாச்சாரத்தை, ஒற்றுமையை, ஒழுங்கை போதிக்கின்றன என்பதை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும் என்பதை குறிப்பிடுவதாலும், ஒரே மதத்தின் வழிபாடு, சடங்குகள் அல்லது கொள்கைகள் பள்ளிகளில் கடைபிடிக்க கூடாது என்பதோடு அனைத்து மதங்களும் சமமாக போற்றப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுவதால் இந்த புதிய கல்வி கொள்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விரும்புகிறாரா ஸ்டாலின்?

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரின் கல்வி மேம்பாட்டை , சீர்திருத்தத்தை வலியுறுத்தும் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதன் மூலம் சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயற்சிக்கும் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை பாஜக அரசு ஒருபோதும் ஏற்காது.

  • நாராயணன் திருப்பதி,
    (செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories