விஜயவாடா கோவிட் தனிமைப்படுத்தும் சென்டரில் தீ விபத்து! 9 பேர் மரணம்!

Published:

vijayawada-covid-centre
vijayawada-covid-centre
  • விஜயவாடா கோவிட் தனிமைப்படுத்தும் சென்டரில் தீ விபத்து.
  • 9 பேர் மரணம்.
  • பலரின் நிலைமை கவலைக்கிடம்
  • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல்

ஒரு தனியார் மருத்துவமனை ஒரு ஹோட்டலை கோவிட் தாக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கென்றும் தனிமைப் படுத்துவதற்காகவும் பயன்படுத்தி வந்தது. பல ஹோட்டல்களை இவ்வாறு தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தி வருகின்றன . இந்த தீ விபத்து நடந்தபோது 30 பேர் நோயாளிகளும் 10 பேர் மருத்துவ சிப்பந்திகளும் இருந்தார்கள்.

விஜயவாடாவில் கோவிட் கேர் சென்டரில் ஞாயிறு இன்று விடியற்காலை மிகப் பெரும் தீ விபத்து நேர்ந்தது. விஜயவாடா ஏலூரு ரோடில் உள்ள ரமேஷ் மருத்துவமனை கோவிட் கேர் சென்டராக பயன்படுத்தும் ஹோட்டல் ஸ்வர்ணா பேலஸில் இந்த விபத்து நேர்ந்தது.

இந்த விபத்தில் 9 பேர் தற்போது வரை மரணமடைந்து உள்ளார்கள். நிமிடத்திற்கு நிமிடம் மரணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பலரின் நிலைமை அபாயகரமாக உள்ளதாக சிபி ஶ்ரீனிவாசுலு தெரிவித்தார். அவர்களில் இருவர் நினைவிழந்து இருப்பதாக கூறினார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

தீயணைப்பு படையினர் கடுமையாக உழைத்து ஜன்னல்களை உடைத்து ஏணிகள் மூலம் பலரை காப்பாற்றியுள்ளார்கள். இந்த ஹோட்டலில் முப்பது நோயாளிகளும் 10 மருத்துவ சிப்பந்திகளும் இருந்தார்கள்.

vijayawada-covid-centre1
vijayawada-covid-centre1

மிகவும் அடர்த்தியாக புகை படர்ந்ததால் அதிலிருந்தவர்கள் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார்கள். பாதிக்கப் பட்டவர்கள் ஜன்னலில் இருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறினார்கள்.

விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்களை லப்பீபேட்ட, மெட்ரோபாலிட்டன் ஹோட்டல் கோவிட் கேர் சென்டர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்கள். சுவர்ணா பேலசில் உதவி நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஷார்ட் சர்க்யூட் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கிரவுண்ட் ப்ளோரிலும் முதல் மாடியிலும் தீ பரவியது. முதல் மாடியில் இருந்து நான்கு பேர் கீழே குதித்தார்கள்.

இன்று விடியற்காலை 4.45 – 5.00 மணி நேர சமயத்தில் இந்த தீ விபத்து நேர்ந்துள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மூச்சு விட முடியாமல் துடிதுடித்தனர். சுவர்ணா பேலசை ஹோட்டலை ரமேஷ் மருத்துவமனை கோவிட் கேர் மையமாக எடுத்து நடத்தி வந்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

தீக்கு அச்சப்பட்டு முதல் மாடியில் இருந்து நான்கு பேர் கீழே குதித்ததாக போலீஸார் தெரிவித்தார்கள். இவர்களில் கிருஷ்ணய்யா என்பவர் தீவிரமாக காயமடைந்துள்ளதாக சிபி கூறினார். இதுவரை 18 பேரை வேறு வேறு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறினார். உயிரிழந்தவர்களில் மூவர் கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளாக தெரிகிறது.

ஒரே ஒரு வெளியேறும் வழி இருந்ததால் ஏணி மூலம் பாதிக்கப்பட்டவர்களை கீழே இறங்கியதாக போலிஸார் தெரிவித்தனர்.

விவரம் அறிந்த உடன் பிரதமர் மோடி ஆந்திர முதல்வர் ஜெகனிடம் போன் செய்து விவரங்களைக் கேட்டறிந்தார். இறந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் உதவியை அறிவித்திருப்பதாக ஜெகன் பிரதமரிடம் கூறியதாக தெரிகிறது. காயமடைந்தவர்களுக்கு மேலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img