நெல்லையில் கந்த சஷ்டி கவச பாராயணம்!

Published:

nellai-vhp-vel-poojai
nellai-vhp-vel-poojai

நெல்லை முழுவதும் வேல் வைத்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் 

கருப்பர் கூட்டம் மற்றும் அவர்களுக்குப் பின்னால் செயல்படும் கூட்டத்தினரை கண்டிப்பதுடன்  கொரோனா நோயில் இருந்தும் மக்கள் விடுபட தமிழ் கடவுள் முருகப் பெருமானின்  கந்த சஷ்டி கவசத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க சாது சந்நியாசிகள் மடாதிபதிகள் ஆதினங்கள் ஆன்மீக பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  நெல்லை மாவட்டம் முழுவதும் விதிகளில்  வீடுகள் வாசலில் வேல் கோலம் மிட்டு   சமூக இடைவெளியுடன் இன்று மாலை 6 மணி* அளவில் ஆடி சஷ்டியை முன்னிட்டு வேல் மற்றும் முருகர் படம் வைத்து பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் படித்தனர் மக்கள்.

நெல்லையில் தியாகராஜநகர், கொக்கிரகுளம், ஜங்சன், பேட்டை, கருப்பந்துறை, திருமால்நகர் , ரெட்டியார்பட்டி ,மணிமூர்த்திஸ்வரம், தச்சநல்லூர் உலகம்மன் கோவில் காலணி , வடக்கு செழியநல்லூர், மற்றும் மாவட்டம் முழுவதும் ஆயிரகணக்கான வீடுகளில் சஷ்டி கவசம் படித்துள்ளனர். 

விஹெச்பி மாவட்ட தலைவர் முத்துகுமார், மாவட்ட செயலாளர் இ.ஆறுமுகக்கனி, மாவட்ட இணை செயலாளர் பாலவிக்னேஷ், மாவட்ட பஜ்ரங்கள் அமைப்பாளர் ஸ்ரீமுத்துராஜ், சத்சங்க அமைப்பாளர் அசோக்,
துறவியர் பேரவை சுவாமி சிவானந்தமய்யா, தச்சநல்லூர் மண்டல் செயலாளர் இசக்கி, மானூர் ஒன்றிய செயலாளர் தங்கவேல், குருசாமி, மணிகண்டன் ஆகியோர் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து அனைத்து பகுதிகளிலும் கலந்து கொண்டனர்.

velpooja-athinam
velpooja-athinam

கந்தசஷ்டியை இழிவுபடுத்திய திமுக கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக சைவ ஆதீன பெருமக்களின் இன்றைய வேல்பூஜை

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
nellai-vel-pooja
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கந்தஷ்டி கவசம் பாராயனம் அந்தணர் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கந்தஷ்டி கவசம் பாராயனம் அந்தணர் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது.

Related articles

Recent articles

spot_img