December 6, 2025, 10:28 AM
26.8 C
Chennai

பருவநிலை மாறுதல்… அலட்சியம் வேண்டாம்! ஓர் எச்சரிக்கை!

climatechange1 - 2025

பருவநிலை மாறுதல்களையும், அவற்றால் ஏற்படும் சமூக, பொருளாதார, வாழ்வாதார, அரசியல், இயற்கைப் பேரிடர் பாதிப்புகள், போன்றவற்றை குறித்து அறியாமையினால், பருவநிலை மாறுதல் என்பது, நம்மூர் அயனாவரத்தினருகே ஏதோ இரு பைக்குகள் மோதி விபத்து என்ற செய்தியை படித்துவிட்டு கடந்துபோவதுபோல அலட்சியப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பருவநிலை மாறுதல்களை பற்றி தெரியாததாலோ, அல்லது தெரிந்தும், அலட்சியப்படுத்தியதாலேயே எகிப்திய பாரோக்களின் அரசுகள் பொருளாதார, சமூக, அரசியல் பிரச்சனை சந்தித்ததும், இயற்கைப் பேரிடர்களை பற்றி அறிவில்லாததால் 12 – 13 – ம் நூற்றாண்டிலிருந்த கொலராடோ பீடபூமியிலிருந்த அனாசாஜி நாகரிகம் அழிந்ததும், அங்கோர்வாட் 15 ம் நூற்றாண்டில் கைவிடப்பட்டு, மக்கள் வாழத்தகுதியில்லாததாக மாறியதும், கி பி 800 – 1200 ல் நிலவிய வெப்பநிலை அதிகரிப்பால், வைக்கிங்குகள் கிரீன்லாந்தில் குடியேறியதும், 4000 – 4200 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி, ஹரப்பா நாகரிகம் பருவநிலை மாறுதல்களினாலேயே பஞ்சம் நிலவியதால் அழிந்தது என்பதும் புவிஅறிவியல்-பழங்கால சூழலியல்-பழங்கால பருவநிலை மாறுதல்களை ஆராயும் விஞ்ஞானிகளினிடையே மிக சாதாரணமாக தெரிந்த விஷயங்கள்.

climatechange2 - 2025

மற்றோர் உதாரணமாக, மிகச்சிறப்பான காலத்தை 300 – 31 BCE ல் கொண்டிருந்த எகிப்தை சொல்லலாம். டோலோமிகளால் ஆளப்பட்டுவந்த இந்த காலகட்டத்தில்தான் அலெக்ஸாண்ட்ரியா நூலகமும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்தக்காலத்தில் நைல்நதிநீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இங்கிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி பூமியின் மறுபக்கம் இருந்த எரிமலைகள் வெடித்தபோது, அவற்றிலிருந்து வந்த புகை, வளிமண்டலத்தில் சல்பர் துகள்களை அதிகமாக்கி, அதனால் பருவநிலை மாறுபட்டு, நைல்நதியின் நீர்பிடிப்புப்பகுதிகளில் மழை குறைந்து, அதனால் விவசாயத்துக்கு தேவையான நீர் கிடைக்காததால், எகிப்தில் கலகங்கள் ஏற்பட்டது சமீபத்தில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏன், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள புகார் நகரம் கடற்கோளால் அழிந்தது என்றும், காவிரியில் கடந்த சிலநூறு ஆண்டுகளுக்குமுன்னர் பெரும்வெள்ளம் வந்ததால், காவிரிக்கரையோரம் இருந்த சிலபல கிராமங்கள் அழிந்ததும், மைசூரினருகே உள்ள தலைக்காடு என்ற பகுதி பூகம்பத்தினால் மணல்மூடி மண்ணுக்குள் புதைந்ததும், முதல், இடை, கடை சங்க காலத்தில் வைகையில் வந்த வெள்ளங்களினாலும், வைகைநதி தனது இடத்தை மாற்றிக் கொள்வதனாலும் பலமுறை வைகைக்கரையோரம் இருந்த பாண்டியரின் தலைநகரங்கள் அழிந்ததும் தெரிந்ததே.

thi viking invations - 2025

புவியியலில் ஒரு விஷயத்தை நாங்கள் நினைவுகொள்வது வழக்கம். அதாவது, புவியியல் என்பது புவியின் வரலாறு. வரலாறில் சுழல் என்பது நியதி.

அதாவது, முன்பொருகாலத்தில நிகழ்ந்த நிகழ்வு, குறிப்பிட்டகால இடைவெளியில் மீண்டும் நிகழும். இது, சிலஆயிரமாண்டுகால மனிதகுல வரலாற்றிற்கும், புவியின் நீண்ட, கோடிக்கணக்கான ஆண்டுகால வரலாற்றிற்கும் பொருந்தும்.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், வரலாறு தன்னை மறந்தவரை மன்னிப்பதேயில்லை. மனிதகுல வரலாற்றைவிட, புவியின் வரலாறை மறந்தவர்க்கு முற்றழிவு (Extinction) மட்டுமே புவியால் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. ஒரு முறையல்ல, இரு முறையல்ல, கடந்த 54 கோடி வருடங்களுக்குள் 5 முறை புவியிலிருந்த 90 % உயிரிகளையும், 30 முறை சிறிய அளவிலும் முற்றழிவுக்கு உட்படுத்தியுள்ளது

  • மு.ராம்குமார் (இணை பேராசிரியர், பெரியார் பல்கலை)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories