பருவநிலை மாறுதல்… அலட்சியம் வேண்டாம்! ஓர் எச்சரிக்கை!

climatechange1 - 2026

பருவநிலை மாறுதல்களையும், அவற்றால் ஏற்படும் சமூக, பொருளாதார, வாழ்வாதார, அரசியல், இயற்கைப் பேரிடர் பாதிப்புகள், போன்றவற்றை குறித்து அறியாமையினால், பருவநிலை மாறுதல் என்பது, நம்மூர் அயனாவரத்தினருகே ஏதோ இரு பைக்குகள் மோதி விபத்து என்ற செய்தியை படித்துவிட்டு கடந்துபோவதுபோல அலட்சியப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பருவநிலை மாறுதல்களை பற்றி தெரியாததாலோ, அல்லது தெரிந்தும், அலட்சியப்படுத்தியதாலேயே எகிப்திய பாரோக்களின் அரசுகள் பொருளாதார, சமூக, அரசியல் பிரச்சனை சந்தித்ததும், இயற்கைப் பேரிடர்களை பற்றி அறிவில்லாததால் 12 – 13 – ம் நூற்றாண்டிலிருந்த கொலராடோ பீடபூமியிலிருந்த அனாசாஜி நாகரிகம் அழிந்ததும், அங்கோர்வாட் 15 ம் நூற்றாண்டில் கைவிடப்பட்டு, மக்கள் வாழத்தகுதியில்லாததாக மாறியதும், கி பி 800 – 1200 ல் நிலவிய வெப்பநிலை அதிகரிப்பால், வைக்கிங்குகள் கிரீன்லாந்தில் குடியேறியதும், 4000 – 4200 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி, ஹரப்பா நாகரிகம் பருவநிலை மாறுதல்களினாலேயே பஞ்சம் நிலவியதால் அழிந்தது என்பதும் புவிஅறிவியல்-பழங்கால சூழலியல்-பழங்கால பருவநிலை மாறுதல்களை ஆராயும் விஞ்ஞானிகளினிடையே மிக சாதாரணமாக தெரிந்த விஷயங்கள்.

climatechange2 - 2026

மற்றோர் உதாரணமாக, மிகச்சிறப்பான காலத்தை 300 – 31 BCE ல் கொண்டிருந்த எகிப்தை சொல்லலாம். டோலோமிகளால் ஆளப்பட்டுவந்த இந்த காலகட்டத்தில்தான் அலெக்ஸாண்ட்ரியா நூலகமும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்தக்காலத்தில் நைல்நதிநீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இங்கிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி பூமியின் மறுபக்கம் இருந்த எரிமலைகள் வெடித்தபோது, அவற்றிலிருந்து வந்த புகை, வளிமண்டலத்தில் சல்பர் துகள்களை அதிகமாக்கி, அதனால் பருவநிலை மாறுபட்டு, நைல்நதியின் நீர்பிடிப்புப்பகுதிகளில் மழை குறைந்து, அதனால் விவசாயத்துக்கு தேவையான நீர் கிடைக்காததால், எகிப்தில் கலகங்கள் ஏற்பட்டது சமீபத்தில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏன், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள புகார் நகரம் கடற்கோளால் அழிந்தது என்றும், காவிரியில் கடந்த சிலநூறு ஆண்டுகளுக்குமுன்னர் பெரும்வெள்ளம் வந்ததால், காவிரிக்கரையோரம் இருந்த சிலபல கிராமங்கள் அழிந்ததும், மைசூரினருகே உள்ள தலைக்காடு என்ற பகுதி பூகம்பத்தினால் மணல்மூடி மண்ணுக்குள் புதைந்ததும், முதல், இடை, கடை சங்க காலத்தில் வைகையில் வந்த வெள்ளங்களினாலும், வைகைநதி தனது இடத்தை மாற்றிக் கொள்வதனாலும் பலமுறை வைகைக்கரையோரம் இருந்த பாண்டியரின் தலைநகரங்கள் அழிந்ததும் தெரிந்ததே.

thi viking invations - 2026

புவியியலில் ஒரு விஷயத்தை நாங்கள் நினைவுகொள்வது வழக்கம். அதாவது, புவியியல் என்பது புவியின் வரலாறு. வரலாறில் சுழல் என்பது நியதி.

அதாவது, முன்பொருகாலத்தில நிகழ்ந்த நிகழ்வு, குறிப்பிட்டகால இடைவெளியில் மீண்டும் நிகழும். இது, சிலஆயிரமாண்டுகால மனிதகுல வரலாற்றிற்கும், புவியின் நீண்ட, கோடிக்கணக்கான ஆண்டுகால வரலாற்றிற்கும் பொருந்தும்.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், வரலாறு தன்னை மறந்தவரை மன்னிப்பதேயில்லை. மனிதகுல வரலாற்றைவிட, புவியின் வரலாறை மறந்தவர்க்கு முற்றழிவு (Extinction) மட்டுமே புவியால் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. ஒரு முறையல்ல, இரு முறையல்ல, கடந்த 54 கோடி வருடங்களுக்குள் 5 முறை புவியிலிருந்த 90 % உயிரிகளையும், 30 முறை சிறிய அளவிலும் முற்றழிவுக்கு உட்படுத்தியுள்ளது

  • மு.ராம்குமார் (இணை பேராசிரியர், பெரியார் பல்கலை)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories