தமிழகத்தில் தற்போது செயல்படாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று திமுக
செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் மேலும் பேசிய அவர், தமிழக
அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆளுநர்
நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று ஸ்டாலின்
தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசை கவிழ்க்க
முயற்சிக்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



