கோவை போலீசார் மீது கர்நாடக போலீசார் வழக்கு பதிவு!

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் கூர்க்கில் டிடிவி ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு
விடுதியில், கர்நாடக காவல்துறை அனுமதியின்றி விசாரணை நடத்தியதாக, தமிழக
காவல்துறை மீது கர்நாடக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு
எம்எல்ஏக்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள குஷால் நகரில் உள்ள
சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்த விடுதிக்குள் சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர், நாமக்கல் போலீஸார்
திடீரென நுழைந்து எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது, தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் ஒப்பந்ததாரர் வழக்கில் முன்னாள்
அமைச்சர் பழனியப்பனை கைது செய்ய வந்ததாக தமிழக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் டிடிவி தரப்பு எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, தங்க
தமிழ்ச்செல்வன் ஆகியோர் அருகிலுள்ள சுண்டிகொப்பா காவல் நிலையத்தில் தமிழக
போலீசார் மீது புகார் கொடுத்தனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

அதில், தமிழக போலீசார் எங்களை மிரட்டினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு
ஆதரவாக செயல்பட்டால் ரூ. 20 கோடி வரை தருவதாக ஆசை காட்டினர். எனவே தமிழக
காவல் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்’ என கூறியிருந்தனர்.

இந்த புகாரை பதிவு செய்து கொண்ட சுண்டிகொப்பா போலீஸார், புகார் குறித்து
அங்கு தங்கி உள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும், இதுகுறித்த விசாரணைக்கு
தமிழக போலீசாரை வரவழைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் இரு மாநில காவல் துறை வட்டாரத்திலும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories