5 மாதம் கழித்து… சதுரகிரி மலையில் தரிசனத்துக்கு அனுமதி!

sathuragiri
sathuragiri
  • சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி…
  • ஐந்து மாதங்கள் கழித்து அனுமதிக்கப் படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி…..

விருதுநகர் மாவட்டத்தில் மிகப்பிரசித்தி பெற்ற, சதுரகிரி மகாலிங்கமலைக்கு ஐந்து மாதங்களுக்குப்பின் நாளை, பக்தர்கள் பொதுமக்கள் மலை மீது செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ளது சதுரகிரி மகாலிங்கமலை. மலைமீதுள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளை தரிசிக்க ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி காலங்களில் தலா இரண்டு நாட்களும் மட்டுமே பக்தர்கள், பொதுமக்கள் மலைமீது செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வந்தனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மகாலிங்கமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் வருவார்கள்.
விருதுநகர், மதுரை மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற மகாலிங்கமலைக்கு, வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் பக்தர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன் அனைவருக்கும் இ-பாஸ் வழங்க அரசு உத்தரவிட்டது. இதனால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் கடந்த அமாவாசை தினத்தில், மகாலிங்கமலை அடிவாரப் பகுதிக்கு திரளாக வந்தனர்.

ஆனால் கோவில்கள் திறக்க அரசு அனுமதி வழங்காததால், பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கோவில்களை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளதால், சதுரகிரி மகாலிங்கமலைக் கோவிலிலும் தரிசனத்திற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாளை ஆவணி மாத பௌர்ணமி நாள் என்பதாலும், மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்து இயங்குவதாலும் சதுரகிரி மகாலிங்கமலைக்கு ஏராளமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும் சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும், முககவசம் அணியாமல் வருபவர்கள் மலை மீது செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் அறநிலையத்துறை, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories