February 22, 2026, 11:58 AM
29.6 C
Chennai

5 மாதம் கழித்து… சதுரகிரி மலையில் தரிசனத்துக்கு அனுமதி!

sathuragiri
sathuragiri
  • சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி…
  • ஐந்து மாதங்கள் கழித்து அனுமதிக்கப் படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி…..

விருதுநகர் மாவட்டத்தில் மிகப்பிரசித்தி பெற்ற, சதுரகிரி மகாலிங்கமலைக்கு ஐந்து மாதங்களுக்குப்பின் நாளை, பக்தர்கள் பொதுமக்கள் மலை மீது செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ளது சதுரகிரி மகாலிங்கமலை. மலைமீதுள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளை தரிசிக்க ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி காலங்களில் தலா இரண்டு நாட்களும் மட்டுமே பக்தர்கள், பொதுமக்கள் மலைமீது செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வந்தனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மகாலிங்கமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் வருவார்கள்.
விருதுநகர், மதுரை மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற மகாலிங்கமலைக்கு, வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் பக்தர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன் அனைவருக்கும் இ-பாஸ் வழங்க அரசு உத்தரவிட்டது. இதனால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் கடந்த அமாவாசை தினத்தில், மகாலிங்கமலை அடிவாரப் பகுதிக்கு திரளாக வந்தனர்.

ஆனால் கோவில்கள் திறக்க அரசு அனுமதி வழங்காததால், பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கோவில்களை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளதால், சதுரகிரி மகாலிங்கமலைக் கோவிலிலும் தரிசனத்திற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாளை ஆவணி மாத பௌர்ணமி நாள் என்பதாலும், மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்து இயங்குவதாலும் சதுரகிரி மகாலிங்கமலைக்கு ஏராளமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும் சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும், முககவசம் அணியாமல் வருபவர்கள் மலை மீது செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் அறநிலையத்துறை, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories