December 6, 2025, 9:25 AM
26.8 C
Chennai

தொடர் மழை! ஆனாலும் பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து இல்லை! விவசாயிகள் கவலை!

parappalaru-dam-without-water
parappalaru-dam-without-water

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீரின் முக்கிய ஆதாரமாக ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை விளங்கி வருகிறது.

ஆண்டுதோறும் பெய்யும் தென் மேற்குப் பருவ மழையால் இந்த அணை நிரம்பி ஒட்டன்சத்திரம் விருப்பாட்சியில் உள்ள தாழையூத்து அருவியின் மூலம் தாசரி பட்டி முத்து பூ பாலசமுத்திரம், விருப்பாச்சி பெருமாள் குளம், தங்கசியம்மபட்டி சடையன்குளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராம சமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ,ஆகிய பகுதியில் உள்ள 6 க்கும் மேற்பட்ட குளங்களுக்கு சென்றடையும்.

இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசனவசதி அடையும். பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 259 ஏக்கர் நிலங்களும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வந்தது. சத்திரப்பட்டி,விருப்பாச்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது.

இந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார சுற்றியுள்ள பகுதிகளில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது. கடந்த வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய பகுதிகளில் சுமார் 47.2mm அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இருப்பினும் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை வனப் பகுதியில் அமைந்துள்ளதால் நீரின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி இதில் தற்போது நீர் இருப்பு 65 அடி இதில் 3 கன அடி நீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது

இதில் குறிப்பாக 30 அடி சேறும் சகதியும் உள்ளது. மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறை சார்பில் கூறியதாவது ஒட்டன்சத்திரம் பாச்சலூர், சிறுவாட்டு காடு, வடகாடு, கே சி பட்டி தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் மழையின் அளவு குறைவாக இருப்பதால் மேற்படி அணைக்கு வரத்து இல்லை என தெரிவித்தனர்.

தொடர் மழை பொழிவு இருப்பினும் கணிதத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் பரப்பலாறு அணை நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories