December 6, 2025, 10:07 AM
26.8 C
Chennai

லஞ்சம் ஊழல் தலை எடுக்க… நாமே காரணம்!

traffic police bribe
traffic police bribe

சாலைவிபத்துகளில் 2019ம் ஆண்டு உயிரிழந்தவர்கள் சுமார் 59,000 பேர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் பல லட்சக்கணக்கான நபர்கள் படுகாயமடைந்து உள்ளார்கள். கட்டுப்பாடற்ற முறையில், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் முறையற்று அலட்சியமாக வாகனங்களை செலுத்துவது மக்களின் தவறே.

குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் செல்வது அதிகரித்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால் தரக்குறைவாக பேசுவதோடு, அதன் விளைவாக மோதல்கள் ஏற்படும் அளவிற்கு நிலைமை விபரீதமாகிறது.

மூன்று பேர் அமர்ந்து செல்வது, தலைக்கவசம் இல்லாமல் செல்வது, காப்பீடு செய்யாமல் இருப்பது, ஓட்டுநர் உரிமங்கள் இல்லாதது, மிக வேகமாக வாகனங்களை செலுத்துவது, அதிக சுமைகளை ஏற்றி செல்வது போன்ற பல்வேறு முறையற்ற செயல்களை மக்கள் அரங்கேற்றுவது கொடூரம்.

காவல் துறை எவ்வளவோ முயற்சி செய்தாலும் அவர்களையும் தாக்குவது, ஏளனம் செய்வது, வசைபாடுவது போன்ற பல கொடுஞ்செயல்கள் அரங்கேறி வருகின்றன. பார்ப்பதற்கு சிறிய விதிமீறல்களாக தோன்றினாலும் பல ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு காரணமாகின்றன என்பதை மக்கள் உணரவேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளிலும் இவை தொடர்கதையாக உள்ளது.

ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் வருவோருக்கு அதிக அளவு அபராதம் விதிப்பதன் மூலமே இந்த குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். மேலும், விதிமீறல்களை செய்து விட்டு காவல்துறையினரிடமும், சட்டத்தை மதித்து வாகனங்களை செலுத்துவோரிடமும் தகராறு செய்வோரை, தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வசைபாடும் நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதன் மூலமே இந்த குற்றங்களை நிறுத்த முடியும். இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ஓட்டுநர்களே பெரும்பாலான விதிமீறல்களை, குற்றங்களை செய்து வருகின்றனர்.

நியாயமாக, கண்டிப்பாக காவல்துறையின் நடந்து கொண்டு நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களின் செயல்களை காட்டுமிராண்டித்தனம் என்றும் அராஜகம் என்றும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் பரபரப்புக்காக காவல்துறையினரின் செயல்பாடுகளை ஊதி பெரிதாக்கி, தங்களின் வியாபாரத்திற்காக மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல், காப்பீடு இல்லாமல், தலைக்கவசம் இல்லாமல், சட்ட விதிகளை மதிக்காமல் வாகனங்களை செலுத்தினால் காவல் துறையினர் கேட்க கேட்கத்தான் செய்வார்கள். சட்ட விதிமீறல்களுக்கு உண்டான அபராதத்தை முறையாக செலுத்தி விட்டால், அவர்கள் லஞ்சம் பெற வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

அதையும் மீறி, லஞ்சம் பெறும் காவல்துறையினரை ஊடகங்கள் அடையாளம் காட்டுவது தவறில்லை. ஆனால், சட்டவிதிகளை மீறி வாகனங்களை செலுத்தி விட்டு, காவல்துறையினரை அத்துமீறி எதிர்க்கும் நபர்களை அப்பாவிகளாக சித்தரிக்கும் பழக்கத்தை ஊடகங்கள் நிறுத்தி கொள்வது நல்லது. பல காவல்துறையினர் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதி களுக்கு பயந்து மற்றும் பணிந்தே விதிமீறல்களை கண்டுகொள்வதில்லை. இது நல்லதல்ல.

காவல்துறையினர் லஞ்சம் பெறுவதாக சொல்லி இந்த விதிமீறல்களுக்கு காரணமாக சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. பெரும்பான்மையான விதிமீறல்களுக்கு மக்களே காரணம்.

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரின் கைகளை கட்டிப்போட்டு வைத்திருப்பது அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள். சமீபத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை, சீர்திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தும், அதை கடுமையாக எதிர்த்தன அரசியல் கட்சிகளும், சில ஊடகங்களும். அவர்கள் எதிர்த்தது அரசை அல்ல. விபத்துகளை, மரணங்களை கட்டுப்படுத்த பாஜக அரசு எடுத்த முயற்சிகளை தான் அவர்கள் எதிர்க்கின்றனர் என்பதே உண்மை.

சட்டங்கள் மக்களுக்காகத்தான். ஆனால், சிலர் அதை மீறும் போது, காவல்துறையினர் உறுதியாக, நேர்மையாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் துணை நிற்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல தற்போதைய அவசரமும் கூட.

மக்களும், ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்வார்களா? காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்.

  • நாராயணன் திருப்பதி. (செய்தி தொடர்பாளர், பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories