ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் தர அரசிடம் பணம் இல்லையா?

ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் தர அரசிடம் பணம் இல்லையா? என்று
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அல்லாத பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவைக் கோட்டத்தில் பணியாற்றும்
பணியாளர்களுக்கு அரை மாத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு இன்னும் ஓய்வூதியம் தரப்படவில்லை.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றில் நிலவும் நிதி
நெருக்கடி என்பது நேற்று முன்நாள் உருவாகி, நேற்று விஸ்வரூபம் எடுத்தவை அல்ல.
கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சினை நீடித்துக்
கொண்டிருக்கிறது. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண
ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது தான் வேதனையாகும்.
அண்ணாமலைப் பல்கலைகக்கழகத்தில் அளவுக்கு அதிகமாக ஆசிரியர்களும், பிற
பணியாளர்களும் நியமிக்கப்பட்டதால் ஊதியம் வழங்க முடியாத நிலை
ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காரணம் காட்டித் தான் அப்பல்கலைக்கழகத்தை அரசு
எடுத்துக் கொண்டது. அங்கு நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே
தனி அதிகாரியை அரசு அமர்த்தியது. ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

தனி அதிகாரியாக சிவதாஸ் மீனா என்ற இ.ஆ.ப. அதிகாரி இருந்தவரை தமிழக
அரசிடமிருந்து கூடுதல் நிதியை வாங்கி செலவுகளை சமாளித்தார். அவர் அந்த
பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு பிறகு கூடுதல் நிதி ஒதுக்குவதை தமிழக அரசு
நிறுத்திவிட்டது. அதனால் நிதி நெருக்கடி நீடிக்கிறது. ஆசிரியர்கள் கல்வி
தானம் வழங்குகிறவர்கள். ஒவ்வொரு மாதமும் ஊதியத்திற்காக அவர்களை அரசு கையேந்தி
நிற்க வைப்பது கொடுமையானதாகும். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிக பணியாளர்கள் இருப்பது தான் நிதி
நெருக்கடிக்கு காரணம் என்று கூறினார்கள். ஆனால், அண்மைக்காலங்களில் மட்டும் 3
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தின் நிதி நிலை மேம்பட்டிருக்க
வேண்டும். ஆனால், நிலைமை மோசமடைந்திருக்கிறது. பல்கலைக்கழகத்தின் செலவுகளை
யாருக்கும் பாதிப்பு இல்லாமல் குறைப்பதும், வருவாயைப் பெருக்குவதும் தான்
இச்சிக்கலுக்கு தீர்வாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை
மேம்படுத்துவதற்காக அதை பன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவது உட்பட ஏராளமான
ஆக்கப்பூர்வயோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது. ஆனால், அவற்றையெல்லாம்
செயல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

தமிழக அரசு தலையிடுவதன் மூலம் செப்டம்பர் மாத ஊதியம் சில நாட்களில் கிடைத்து
விடலாம். ஆனால், நிதி நெருக்கடி நிரந்தரமாக தீர்க்கப்பட்டால் தான்
ஆசிரியர்களும், ஊழியர்களும் எதிர்கொண்டு வரும் இன்னல்களுக்கு தீர்வு காண
முடியும். நிதி நெருக்கடியால் பணியாளர்களுக்கு பதவி உயர்வு, அகவிலைப்படி
உயர்வு உள்ளிட்டவை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்களின்
செயல்பாட்டுத் திறன் குறைவதை அரசு உணர வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக
ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும். நிதி நெருக்கடிக்கு
நிரந்தரத் தீர்வு காண்பதற்கான உத்திகள் வகுத்து செயல்படுத்தப்படும் வரை
பல்கலைக்கழகத்தின் நிதிப்பற்றாக்குறையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு
உள்ளது. அந்தக் கடமையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல், நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஊதியம்
தரவும், ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கவும் நிதி இல்லாமல்
போக்குவரத்துக் கழகங்கள் திணறுகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு
தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளும், இழப்பை சமாளிக்கத் தேவையான
மானிய உதவியையும் தமிழக அரசு வழங்காதது தான் இதற்குக் காரணமாகும்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை வழங்கியும், இழப்பு
மானியம் அளித்தும் போக்குவரத்துக் கழகங்கள் சீராக இயங்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories