மனுதார் ஐயப்பன் கனரா வங்கி கிளை மேலாளர் மீது திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் கடந்த 2016 இல் வழக்கு தொடர்ந்தார்.
கனரா வாங்கி மனுதாரர் ஐயப்பன் சேமிப்பு கணக்கில் இருந்து எடுத்த பணம் ரூபாய் 12/- திரும்ப கொடுத்துவிட்டது.
இந்தநிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் நாராயணசாமி மற்றும் உறுப்பினர் சிவ மூர்த்தி ஆகியோர் மனுதார் ஐயப்பன் சேமிப்பு கணக்கில் இருந்து ரூபாய் 12/- மனுதார் அனுமதி பெறாமல், விண்ணப்பம் எதுவும் பெறாமல், காப்பீடு செய்தது சேவைகுறைப்பாடு ஆகும் என்பதால் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 5,000 வழக்கு செலவு ரூபாய் 3000/- சேர்த்து மெத்தம் ரூபாய் 8,000/ ஒருமாத காலத்திற்குள் மனுதாரிடம் நேரடியாக நான்குனேரி கனரா வங்கி கிளை மேலாளர் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


