December 7, 2025, 1:43 AM
25.6 C
Chennai

திருப்பரங்குன்ற வேல் எடுக்கும் விழா, நவராத்திரி உத்ஸவம் ரத்து!

thiruparankundram-vel-function2
thiruparankundram-vel-function2

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், புரட்டாசி மாத மலைமேல் குமரர் (வேல் எடுக்கும்) திருவிழா மற்றும் நவராத்திரி உற்சவ திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப் பட்டுள்ளது.

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மலைமேல் வேல்எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் வீரியம் அதிகரிப்பதன் காரணமாகவும், பொதுமக்களின் கூட்டத்தினை தவிர்க்கும் வகையிலும் மலைமேல் குமாரர் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

thiruparankundram-vel-function
thiruparankundram-vel-function

அதேபோல் நவராத்திரி உற்சவ விழாவும் வருடா வருடம் அக்டோபர் மாதம், பத்து நாட்கள் விமர்சியாக நடைபெற்று வந்த நிலையில், அரசின் உத்தரவின் பேரில்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக அக்டோபர் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவிருந்த நவராத்திரி கோவர்தனம்பிகை உற்சவ திருவிழா, பசுமலையில் நடைபெறும் அம்பு போடும் விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thiruparankundram-vel-function1
thiruparankundram-vel-function1

இதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் சன்னதியில் நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நிகழ்ச்சிகளில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட தேதிகளில் மக்கள் கோவிலில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories