நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை வரை அருவியில் வெள்ளம் குறையாததால் குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.


