புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்தனர்
அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டிணத்தில் நேற்று காலை 194 விசைப்படகில் தனித்தனியாக மீன்பிடிக்க சென்றனர் இவர்கள் அனைவரும் நடுக்கடலில் மீன்பிடித்தபோது அங்கு ஆய்விற்கு வந்த இலங்கை கடற்படை நெடுஞ்தீவினை ஒட்டிய பகுதியில் மீன்பிடித்த கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த ராஜ்குமார் ஜகுபர் கஜேந்திரன் கருப்பையா உட்பட 4 பேர்களை எல்லைதாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி கைது செய்தனர் இச்சம்பவம் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்


