நெருக்கடியில் லக்ஷ்மி விலாஸ் வங்கி; மூடிக் கிடக்கும் ஏடிஎம்.,கள்!

lakshmivilas-bank
lakshmivilas-bank

லக்ஷ்மி விலாஸ் வங்கி கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், திருச்சியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ATM களும் நேற்று முதல் செயல்படவில்லை. வங்கி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லட்சுமி விலாஸ் வங்கியின் மீது ஏற்கெனவே பலமுறை ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப் பட்டிருந்தன. பலமுறை அபராதம் விதிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனமான இந்தியா புல்ஸ் என்ற நிறுவனம் வாங்கும்போது பல்வேறு புகார்கள் எழுந்தன.

தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதித்துறை, வங்கி இயக்க தடை விதித்துள்ளது. இந்த வங்கியின் சேமிப்பு, நடப்பு மற்றும் அனைத்து கணக்குகளில் இருந்தும் ரூ.25,000க்கு மேல் எடுக்க முடியாது. ஒருவருக்கே பல கணக்குகள் இருந்தால் மொத்தம் சேர்த்து ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும்.

லட்சுமி விலாஸ் வங்கி அளித்துள்ள டிராப்டுகள், பணமுறிவுகள் போன்றவற்றுக்குப் பணம் அளிக்கப்பட மாட்டாது. அத்துடன் இந்த வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ள பில்களுக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது. அத்துடன் இந்த வங்கி அளித்துள்ள கடன் உறுதிப் பத்திரம் ஆகியவையும் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது. ஏற்கெனவே பெரிய கடன் வழங்க விதிக்கப்பட்ட தடை அனைத்துக் கடன்களுக்கும் அமலாகிறது… என்று தகவல் வெளியானது.

லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் வர்த்தக இயக்கத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், DBS வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடை இன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ரேன்பாக்ஸி நிறுவனத்துக்கு வழங்கிய ரூ.720 கோடி கடன் திரும்ப வராததை அடுத்து சிக்கலில் மாட்டியது லக்ஷ்மி விலாஸ் வங்கி.

இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ.25,000 க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று, லக்ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது.

தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கு விலை பங்குச் சந்தையில் 20% சரிவு கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் ரூ.15.50-ஆக இருந்த லக்ஷ்மி விலாஸ் வங்கிப் பங்கு விலை ரூ.12.40-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

லக்ஷ்மி விலாஸ் வங்கி தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கி. ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில், தி லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலைமை கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து அதன் நிகர மதிப்பைக் குறைத்து வருவதால் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories